Monday, January 14, 2013

பிறந்தநாள் பரிசு
















இன்று என்னவளின் 
பிறந்தநாள் 

வழக்கம் போல் 
வாழ்த்து அட்டைகளும் 
பரிசுகளும் வாங்கிவிட்டேன்
வெகு முன்னரே 

இந்த முறையும்  வழக்கம் போல்
அவளிடம் கொடுக்காமாலும்
விட்டுவிட்டேன்

அவளிடம் ஒருவேளை 
எனது வாழ்த்து அட்டை 
சேர்ந்திருக்குமாயின்
இது அவளுக்கு கிடைக்கும் 
எட்டாவது வாழ்த்து 
அட்டையாய் இருந்திருக்கும்

என் பரிசுகள் அவளை 
சேர்ந்திருக்குமாயின் 
அவள் வீடே நிறைந்திருக்கும்  

இங்கு யார் 
துரதிர்ஷ்டசாலி 

ஒவ்வொரு முறையும் 
அவளை சேராமலே 
பெட்டிக்குள் முடங்கும் 
என் வாழ்த்து அட்டைகளும்
பரிசு பொருட்களுமா ??
அவைகளை  அவளிடம்
சேர்க்க தவறும் நானா??
என் அன்பை தவற
விட்டுக்கொண்டேயிருக்கும் 
என்னவளா ??

என்னையாவது அவளிடம் 
சேர்த்துவிடு கெஞ்சியது
நான் அவளுக்காய் 
பார்த்து பார்த்து வாங்கிய 
பரிசு

அதனிடமும்  சொல்லியேவிட்டேன் 
உன்னையும், அவளையும் 
எனக்கென தேர்ந்தெடுத்த
என் மனதே அவளை 
சேராத போது உன்னை சேர்ப்பது 
மட்டும் எப்படி நியாயமாகும்

பரிசு என்பதே நம் நினைவாய் 
ஒருவருக்கு தருவது தான் 
என்னவளுக்கு 
நான் தரும் பிறந்த நாள் 
பரிசே 
அவள் வாழ்வில் நானோ 
இனி என் நினைவாக எதுவுமே 
அவளுக்கு இல்லை என்பதே

தேவதைகள் மற்றவர்
வாழ்த்துவதால் தான் வாழும்
என்பதில்லை, என்னவளும் 
ஓர் தேவதை தான்

இனி நூறு வருடம் 
சந்தோசமாய் 
வாழட்டும் என் நினைவுகலன்றி .. 
 

No comments:

Post a Comment