இன்று என்னவளின்
பிறந்தநாள்
வழக்கம் போல்
வாழ்த்து அட்டைகளும்
பரிசுகளும் வாங்கிவிட்டேன்
வெகு முன்னரே
இந்த முறையும் வழக்கம் போல்
அவளிடம் கொடுக்காமாலும்
விட்டுவிட்டேன்
அவளிடம் ஒருவேளை
எனது வாழ்த்து அட்டை
சேர்ந்திருக்குமாயின்
இது அவளுக்கு கிடைக்கும்
எட்டாவது வாழ்த்து
அட்டையாய் இருந்திருக்கும்
என் பரிசுகள் அவளை
சேர்ந்திருக்குமாயின்
அவள் வீடே நிறைந்திருக்கும்
இங்கு யார்
துரதிர்ஷ்டசாலி
ஒவ்வொரு முறையும்
அவளை சேராமலே
பெட்டிக்குள் முடங்கும்
என் வாழ்த்து அட்டைகளும்
பரிசு பொருட்களுமா ??
அவைகளை அவளிடம்
சேர்க்க தவறும் நானா??
என் அன்பை தவற
விட்டுக்கொண்டேயிருக்கும்
என்னவளா ??
என்னையாவது அவளிடம்
சேர்த்துவிடு கெஞ்சியது
நான் அவளுக்காய்
பார்த்து பார்த்து வாங்கிய
பரிசு
அதனிடமும் சொல்லியேவிட்டேன்
உன்னையும், அவளையும்
எனக்கென தேர்ந்தெடுத்த
என் மனதே அவளை
சேராத போது உன்னை சேர்ப்பது
மட்டும் எப்படி நியாயமாகும்
பரிசு என்பதே நம் நினைவாய்
ஒருவருக்கு தருவது தான்
என்னவளுக்கு
நான் தரும் பிறந்த நாள்
பரிசே
அவள் வாழ்வில் நானோ
இனி என் நினைவாக எதுவுமே
அவளுக்கு இல்லை என்பதே
தேவதைகள் மற்றவர்
வாழ்த்துவதால் தான் வாழும்
என்பதில்லை, என்னவளும்
ஓர் தேவதை தான்
இனி நூறு வருடம்
சந்தோசமாய்
வாழட்டும் என் நினைவுகலன்றி ..
No comments:
Post a Comment