Monday, January 7, 2013

மறதி












மறக்காமல் நீ 
குடை எடுத்து வந்ததால்
"உன்னை நனைக்காமல் 
விடுவதில்லை" என்று 
நினைத்திருந்த மழை,
தன்னையும் மறந்து 
சோகத்துடன் காத்திருக்கிறது
வேறொரு அதிர்ஷ்ட 
நாளுக்காய்

உலகம் மழையை நம்பி 
மழையோ உன் மறதியை 
நம்பி 

இன்னமும் இவைகளின் 
காத்திருத்தல் தொடர்கிறது  

No comments:

Post a Comment