என்னவளே
எதற்கிங்கே வந்திருக்கிறாய்
அன்று நான் உனக்கு
கொடுத்த ஒற்றை ரோஜாவை
இன்று எனக்கு வைத்து விட்டு
போக வந்தாயோ??
நான் இருந்த போதே
கொடுத்த பொருளும்,
கொடுத்த வாக்கும்
ஏன் உன்னிடம் கொடுத்த
என் மனமும் திரும்ப பெறாதவன்...
இன்றும், என்றுமே அப்படித்தான்
இனிமேலா உன்னிடமிருந்து
இவைகளைப் பெற போகிறேன்
அது தெரிந்து தான்
கொடுத்து விட்டு சென்ற
பொருளை வைத்துவிட்டு
செல்ல இன்று வந்தாயோ நீ ?
போய் விடு பெண்ணே !!!
இல்லையேல் எழுந்து வந்து
இவை எல்லாவற்றுடன்
அன்று சொல்ல மறந்த(?)
என் காதலையும் சொல்ல
நினைக்கிறது மௌனித்த
என் உதடுகள்
உன்னுடனயே கிளம்பி
வர திரும்பவும் துடிக்கிறது
என் துடிப்பு நின்று போன
இதயம்
போய் விடு பெண்ணே !!!
உன்னுடன் வாழாத
என் வாழ்க்கையின் பெரிய
ஏமாற்றத்தை விட
இனிமேல் உன்
நினைவுகள் என்றுமே
என்னுடன் எனும்
நிம்மதி பெருமூச்சில்
தனிமையில் நான்
" வாழ விரும்புகிறேன் "
No comments:
Post a Comment