போடி!! இனி
நான் கவிதை
எழுதுவதாயில்லை
கவிதைக்கு சிறப்பே
அழகாய் இருக்கும்
ஒன்றை மற்றொன்றுடன்
ஒப்பிட்டு எழுதுவது தான்
ஆனால் உன் அழகை
இந்த உலகில் உள்ள
எதற்கு ஒப்பிட்டு எழுத??
அப்படி ஒன்று இவ்வுலகில்
இருப்பதாய் தெரியவில்லை
உன் அழகுடன் ஒப்பிட
நான் இந்த உலகை தாண்டி
வேறெதுவும் கண்டதுமில்லை
காகமது கரைந்தால்
உறவுகள் தேடி வருமென
கேள்விபட்டிருக்கிறேன்
அது உண்மை தான் போலும்
காகத்திற்கு எப்படி தெரியும்
என் உயிர் உறவாய்
என் வாழ்வில் நீ
வந்துவிட்டாய் என
இன்று நாள் முழுவதுமாய்
என்னை சுற்றியே
கத்திக்கொண்டிருக்கிறது
ஆனால் எப்போதும் போல்
அல்லாமல் அந்த சத்தமும்
கூட இன்னிசையாய் தான்
கேட்கின்றது
ஏனென்றால்,
எனக்குப்பிறகு என் காதலை
கண்டு சொன்னதாள் அதுவும்
எனக்கு எங்கள்
காதல் பறவையாய் அல்லவா
ஆகிவிட்டது...
என்னவளே வெட்கம், அது
உனக்கு வரும் போது தான்
தன்னையே உணர்ந்துகொள்கிறது
என்னையும் ஓரேயடியாய்
கொல்கிறது
நான் உன்னை விரும்பியதால்
நீ என் மனச்சிறையில்
நீ என்னை விரும்பியதால்
நீ அடைக்கப்பட்டதோ
உன் வீட்டுச்சிறையில்
இரண்டிலுமே
நீ இருப்ப தென்னமோ
தனிமைச்சிறையில்
இருவருமே தானே
விரும்பினோம்
உனக்கும் மட்டுமே ஏன்
இந்த தண்டனை
உடல் இங்கிருக்க என்
உயிரை மட்டுமே
தண்டிப்பது தானோ
புனிதமாய் நாம் நம்பும்
இந்த காதல்??
எப்போதும் போல் அல்லாமல்
இன்று எழுதவே மறுக்கும்
என் பேனாவில்
ஊற்ற மறந்துவிட்டேன்
அவள் நினைவுகளை
இவள்
சீக்கிரம் வாடும் பூக்களை
விற்று வாழ்ந்தும் கூட
இவள்
முகத்தில் வாடாமல்
இன்னமும் வாழ்கிறது
மௌனமாய், நாம்
யாருமே கண்டிராத
ஓர் அசட்டுச்சிரிப்பு
அதில் மயங்கியதால் தான்
தன்னை பறிக்கும் போதும்
கூட எந்த பூவும்
இவளிடம்
கோபித்துக்கொள்வதில்லை
அன்பே நீ
படமெடுக்க அந்த
ஆழ்கடலும் அலையடித்து
ஆர்ப்பரித்து சிரிக்கின்றது
அந்த சூரியனும்
அஸ்தமனமாக மறுக்கிறது
நிலவோ வெட்கத்தில்
மேகத்துக்குள் மறைந்து தன்
முகம் காட்ட மறுக்கின்றது
இதெல்லாம் விடுத்தது
அழகாய் புகைப்படம்
எடுத்திருக்கின்றாயே
எல்லோரிடமும்
மறைத்தே வைத்திருக்கும்
என் மனதை
சகியே
உன் கண்ணீர் துளிகளில்
கரைந்து அழிந்தும்
விட்டதடி என் சோகம்
இன்னும்மென்ன?, உன்
இதழ்களில் இனியாவது
புன்னகைப்பூ பூக்கட்டுமே
என் சந்தோசத்தின்
வாழ்த்துக்களுடன்...
உணர்ந்து கொண்டவனாய்
சொல்கிறேன்...உன்
சோகமோ, சந்தோசமோ
அழுகையோ, சிரிப்போ
அது வாழ்த்துவதும்,
வீழ்த்துவதும் என்னையும்
நம் வாழ்க்கையும் தான்
என்னவளே!!!
இன்னும் என்ன சோகம்
கொஞ்சம் நம் உலகை
ஏரெடுத்துப்பார்
நீ மட்டும் அல்ல
உன் சோகத்தினால்
நிலாவும் அழுகின்றது
நானும் தான் தேய்கிறேன்..
என்ன தான் தொலைத்தேனோ
தெரியவில்லை ஆனாலும்
ஒரு வகை தேடலில்
துவங்கி தொலைத்ததை
கண்டுபிடிக்க முடியாத
சோகத்திலேயே
முடிந்து விடுகின்றது
என் ஒவ்வொரு நாளும்
தேடல் வாழ்க்கையில்
சுவாரஸ்யம் தான்
ஆனாலும் வாழ்க்கையே
தேடலலானால் ??
தேடியது கிடைக்காமலே
போனால்??
என்ன சொல்ல
அதுதான் சொல்ல
முடியா வேதனை
நானும் இந்நாளில்
அப்படியொரு
வேதனையில் தான்
சிக்கித்தவிக்கிறேன்