நேற்று தான் எங்கோ படித்தேன்
காதலோ, நட்போ எந்த உறவுமே
பாட்டாம் பூச்சி போல
இறுக பிடித்தால இறந்துவிடுமாம்
விளையாட்டாய் பிடித்தால்
பறந்துவிடுமாம்
ஆனால் எனக்கோ
அதை எப்படி பிடிப்பதென்றும்
தெரியவில்லை, அதற்கும்
என்னிடம் எப்படி இருப்பதென்று
தெரியவில்லை
ஒருவேளை இப்படி இருக்குமோ?
என் வாழ்க்கையில் மட்டும்
உறவின் கையில் அகப்பட்ட
பட்டாம்பூச்சி நானாய்
இருக்கிறேனோ??
என்னை இப்படி கைஆளுகிறதே
எல்லா உறவுகளும்.
ஒவ்வொரு நாளும் மரண
பயத்துடன் பறக்க நினைத்தும்
முடியாமால்....
நரக வேதனையுடன் நகர்கிறது
என் வாழ்க்கை
பிழைப்பேன் என்ற நம்பிக்கை
முற்றிலுமாய் அழிந்து போக
இன்னும் எதற்கு தான்,
எதுவரை தான் என் ஆயுள்
நீண்டிருக்கிறதோ??
பூக்களும் கூட ஒவ்வொரு
ஒவ்வொரு நாளும்
விடியளுக்காய் காத்திருக்க,
நான் மட்டும்
நாளை என்ற ராட்சசனை
எதிர் கொள்ள முடியாமல்
வேண்டிகொண்டிருக்கிறேன்
முழு நேர இருட்டிற்காய்
பட்டம் பூச்சிகள் இரவில்
பறப்பதும் இல்லை
என் வாழ்க்கையில்
விடியலே இனி என்றும்
இல்லை
தொட்டில் பழக்கம் சுடுகாடு
வரை தொடருமாம்
பழமொழி சொல்கிறது
என்னவளே நான் தொட்டிலில்
கிடந்த போது நீ யார்
என்பதை கூட அறியேன்
ஆனாலும் உன் பழக்கமும்
நினைவுகளும் எப்படி
என் கல்லறை வரையிலும்
கூட தொடர்கிறது
இது எப்படி சாத்தியம்??

எறும்பாய் மாறிட ஆசை
படுகிறேன் அல்லது
எறும்பாய் அடுத்த
ஜென்மத்திலாவது பிறந்திட
வேண்டிக்கொள்கிறேன்
காரணம்
எறும்பு தான் தன்னை
காட்டிலும் பல மடங்கு
சுமையை தூக்கி
சுமக்குமாமே
அது போல்
என் எடையை விட பல
மடங்கு எடை கொண்ட
உன் கனத்த நினைவுகளை
இந்த ஜென்மத்தில் மட்டும்
அடுத்த ஜென்மத்திலும்
என் இதயத்தில்
தூக்கி சுமக்க விரும்புகிறேன்
சுமையாய் அல்ல
சுகமாய்......

தோழியே
தவறே செய்யாதவன்
என்னை தவிர்த்து,
தனிமைபடுத்தி,
என்னை விட்டு விலகி
என்னை தண்டித்தாய்
எனக்கோ காரணம்
அறியவில்லை ஆனால்
உனக்கோ காரணம்
சொல்ல தோன்றவில்லை
இல்லையில்லை ஏனோ
பிடிக்கவில்லை
உன்னை
சமாதான படுத்துவதாய்
எண்ணி நான்
செய்தவைகளில் பலவற்றிலும்
தோல்வியே பெறுகிறேன்
உண்மையில் இப்போதுதானடி
அதிகமாய் தவறுகள் செய்ய
கற்றுகொண்டிருக்கிறேன்
செய்து கொண்டிருக்கிறேன்
என்னையும் அறியாமல்
எனக்கு ஆதரவாய்
தோள் கொடுக்க வேண்டிய
நேரத்தில் ஏனோ நீ
எனக்கு எதிராகவே வாள்
எடுக்கிறாய்..
வெட்ட வேண்டாம் நானே
வீழ்ந்து போகிறேன்
கடைசி ஆசையாய்
எப்போதும் போல
நீயே ஒருமுறை வந்து
என்னை திருத்தி விடு
புதிய முகம் எடுத்து
வந்தேனும் என்னை
பழைய நல்லவனாய்
திருப்பிக்கொடு
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காய்
ஏற்றுக்கொள்கிறேன் அது
மன்னிப்பென்றாலும்,
மரண தண்டனை என்றாலும்
பழைய புன்னகையுடன்..

உன் முக-புத்தகத்தில்
எனக்கு மட்டுமே
புரியும் படி ஆயிராயிரம்
அழகு கவிதைகள்
அதை எழுதிய
கவிஞனை நான் அறியேன்
ஆனாலும் அதை மொத்தமாய்
படித்திட எனக்கு மட்டுமே
அனுமதி தந்த என்னவளுக்கு
மட்டுமே என் உரித்தாகட்டும்
என் நன்றிகள்
தோழியே !!!
இப்போது கூட சுயநலமாய்
தானே யோசித்திருக்கிறாய்
என் நெஞ்சில் நீயும்
உன் நட்பும் நிறைய
நிறைந்திருக்கிறதென்று
தெரிந்து
முதுகில் குத்தினாயே
வலிக்கிறது தான்
பின்நாளில் நீ உண்மையை
அறிந்து என்னிடம் திரும்ப
வரும்போது என்னை
பார்க்க கூட முடியாமல்
வருத்தப்படுவாயே
என்று நினைத்திடும் போது
வரம்
இந்த வார்த்தையை
கேட்ட மாத்திரத்தில்
உன் தாயும்
அவள் நினைவுகள் பற்றியும்
எழுத உனக்கு
எண்ணம் தோன்றுகிறதா?
"தாய்மை"
உண்மையில் உலகிற்கு
கிடைத்த மிகப்பெரிய
வரம் தான்..
உன் புன்னகையா?
தன் புன்னகையா?
எது அழகு?
என்று நீ வைத்திருக்கும்
பூக்களுக்குமே ஒரு
சந்தேகம்
நீ வென்று விடுவாயோ
என்ற சோகத்தில்
பூக்கள் வாடிப்போனது
உன் புன்னகையோ
பூக்கள் வாடிவிட்டது
என தீர்ந்து போனது
பொறாமையால் தீர்ந்து
போன பூக்களின்
புன்னகையா?? அல்லது
நேசித்த பூக்கள் வாடியதால்
மறைந்து போன உன்
புன்னகயா எது
சிறந்தது??