Friday, May 24, 2013
நனையாமல்

தோழியே !!
குடை எதுவும்
நமக்கு தேவையில்லை
நான் உன் அருகில்
இருக்கும் போது
மழை என்றும் உன்னை
நனைப்பதில்லை
காரணம் மழைக்கு
தெரிந்திருக்கும் நான் உன்
மேல் வைத்திருக்கும்
காதலும் அதன் சக்தியும்
ஒருவேளை உன்னை அது
நனைத்து இம்சித்தால் அதற்க்கு
ஏற்படும் இன்னலும் அது
தெரிந்து வைத்திருக்கும்
எனவே வா என்னுடன்
நம்பிக்கையுடன் மழையில்
நடந்து செல்வோம் நனையாமல்
வாழ்கை கடந்து செல்வோம்
கலங்காமல்...
Friday, May 10, 2013
அழகு நிலா
என் வாழ்க்கை பயணம்
தொடங்கியது முதலாய், நான் எங்கு
சென்றாலும், பயணம் எவ்வளவு
கடினமாய் இருந்தாலும்
என் பாதைக்கு ஒளி தந்து
என்னுடனயே பயணிக்கிறது
இந்த வான் நிலா
இதற்கும் தான் என்மேல்
எவ்வளவு அக்கறை
இப்படிதானே எண்ணியிருந்தேன்
இப்போது தான் உண்மை புரிகிறது
என்னவளே, எனக்காய் காத்திருக்கும்
உன்னிடம் சேர்க்கத்தானோ
இவ்வளவு பாதுகாப்பாய்
ஆதி முதல் இன்று வரை என்னை
அழைத்து வந்திருக்கிறது
இந்த அழகு நிலா
Subscribe to:
Comments (Atom)






