எங்கே கடவுள்
சிற்பி அழுதான்
"கடவுளே சிலை ஒழுங்காய்
வரவேண்டும்" என்று
கல் அழுதது "கடவுளே
எனை நொறுக்கி
செதுக்குகிறான் சிற்பி" என்று
கல் சிலை ஆன பின்
அதனிடம் மனிதன் அழுதான்
"கடவுளே துன்பம் என்னை
நொறுக்குகிறது" என்று
உண்மையில் எங்கே கடவுள் ???
எது தான் துன்பம் ???
துன்பமே தொடக்கமானால்
கடவுள் தான் முடிவோ ??
No comments:
Post a Comment