அதிகாலை கனவு
என்னவளே!! இராப்பகலாய்
என் கண்களில் கனவாய்
நிறைந்திருப்பதை
நிறுத்திக்கொண்டு, இனி
அதிகாலை கனவில் மட்டும்
மறக்காமல் வந்து விடு
காரணம்
அதிகாலை கனவு தான்
பலிக்குமாம்
நீ மட்டும் வர
சம்மதித்தால் போதும்
சூரியனையும் கேட்டுவிடலாம்
அதிகாலையை
நம் வாழ்நாள் முழுவதும்
எல்லா பொழுதுகளிலும் நீட்டிக்க
No comments:
Post a Comment