மழைத்துளி
என் இந்த ஜென்மமும்
வீணாகிப்போனது
கடைசியாய் ஒருமுறையேனும்
அவளை தொட்டுவிட்டு
அவள் நின்ற இதே மண்ணில்
மோட்சம் பெற
நினைத்தேன், தவித்தேன்
அதை தடுத்துவிட்டு
அவள் கையில் இருக்கும்
இறுமாப்பில் சிரிக்கின்றது
பாழாய்ப்போன இந்த குடை
வருத்தத்தில் மழைத்துளி
No comments:
Post a Comment