என் இறுதி யாத்திரையின்
போது என்னை தன் தோளில்
சுமப்பார்களென நான்
நம்பிய தோழர் சிலர்க்கு
நான் அவர்கள் நண்பனாய்
இருப்பதே பாரம் என்றாகிவிட்டது
இந்நாளில் வார்த்தைகளால்
என்னைக்குத்தி
என் நட்பை கொன்றுபோட்டனர்
இப்போது
நட்பை இழந்து,
நண்பர்களையும் இழந்து
சவமாய் கிடக்கும் என்னை
சுமக்க பிரிந்து சென்ற
என் நண்பர்கள் வருவார்கள்
என இன்னமும் நம்பி,
காத்துக்கொண்டிருக்கிறேன் நான்
காரணம் இருக்கிறது
எனக்கு தெரியும், என் நண்பர்கள்
எப்போதும், எதற்கும்
தாமதமாய் தான் வருவார்கள்
உண்மையான நட்பையும்,
சில உண்மைகளையும் அவர்கள்
இன்னும் தாமதமாய்
உணர்வார்கள் என்றும்
No comments:
Post a Comment