எனக்கு
எத்தனையோ துன்பங்கள்,
துயரங்கள், ஏமாற்றங்கள்
காயங்கள், இழப்புக்கள்
ஆனாலும் நான்
இவ்வளவு வாடியதில்லை
என்னவளின் பிரிவைத்தவிர ...
என் தற்காலிக தாய் மடியாய்
நான் முகம் புதைத்து
அழும்போது எனக்கு அறுதல் சொல்லும்
என் தலையணை , இந்த அளவுக்கு
என் கண்ணீரில் நனைந்ததுமில்லை
என் இந்த ஜென்மமும்
வீணாகிப்போனது
கடைசியாய் ஒருமுறையேனும்
அவளை தொட்டுவிட்டு
அவள் நின்ற இதே மண்ணில்
மோட்சம் பெற
நினைத்தேன், தவித்தேன்
அதை தடுத்துவிட்டு
அவள் கையில் இருக்கும்
இறுமாப்பில் சிரிக்கின்றது
பாழாய்ப்போன இந்த குடை
வருத்தத்தில் மழைத்துளி
சில வரிகளில்
என் மனவலிகள்
ஒவ்வொரு எழுத்துக்களுமே
என் கண்ணீர் துளிகள்
என் வாழ்க்கை துயரங்களை
சொல்லும் நான் கிறுக்கும்
காதல் கவிதைகள்
பொதுவாய்
பஞ்சும் நெருப்பும்
தானே பற்றிக் கொள்ளும்
விநோதமாய்
என்னவள் நினைவுகளால்
பொங்கி, கண்கள் நிறைந்து
வெளியேறிய கண்ணீரில் ஊறிய
தலையணை பஞ்சும் கூட
இப்படி பற்றி எரிகிறதே
என்னை முழுவதுமாய்
அழித்துவிட்டு தான் அது
அணையுமோ ??
என் இறுதி யாத்திரையின்
போது என்னை தன் தோளில்
சுமப்பார்களென நான்
நம்பிய தோழர் சிலர்க்கு
நான் அவர்கள் நண்பனாய்
இருப்பதே பாரம் என்றாகிவிட்டது
இந்நாளில் வார்த்தைகளால்
என்னைக்குத்தி
என் நட்பை கொன்றுபோட்டனர்
இப்போது
நட்பை இழந்து,
நண்பர்களையும் இழந்து
சவமாய் கிடக்கும் என்னை
சுமக்க பிரிந்து சென்ற
என் நண்பர்கள் வருவார்கள்
என இன்னமும் நம்பி,
காத்துக்கொண்டிருக்கிறேன் நான்
காரணம் இருக்கிறது
எனக்கு தெரியும், என் நண்பர்கள்
எப்போதும், எதற்கும்
தாமதமாய் தான் வருவார்கள்
உண்மையான நட்பையும்,
சில உண்மைகளையும் அவர்கள்
இன்னும் தாமதமாய்
உணர்வார்கள் என்றும்
அன்று
எனக்கே தெரியாமல்
வெறும் கண்பார்வையால்
என் மனம் திருடியவளுக்கு
தண்டனையாய்
தங்கத்தாலி எனும் காப்பிட்டு
கைதுசெய்தேன்
இன்று
என் வாழ்க்கை
முழுவதற்கும்
மீள முடியா ஆயுள்
கைதியாய் நான் அவளிடம்
ஆனால்
தண்டனையும் இப்போது
இனிக்கத்தான் செய்கிறது