Saturday, December 31, 2011

டிசம்பர் 31














இதோ இந்த ஆண்டின்
கடைசி நாளில்
இல்லையில்லை புத்தாண்டின்
முந்தய நாளில்...
எல்லோரும் புதுவருடத்தை
எப்படி வரவேற்கலாம் என்று
யோசித்துக்கொண்டிருக்க
நானோ பழைய வருடத்தை
வழியனுப்ப வந்திருக்கிறேன்
எப்படி புதுவருட கொண்டாத்தை
கொண்டாடலாம் என்று எண்ணிக்
கொண்டிருப்போர் மத்தியில்
பழைய வருடத்தை நான் எப்படி
கொண்டாடிக்கழிதேன் என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
கடந்த வந்த பாதையை மறக்காதவர்
எவரும் கடந்த வருடத்தின் நிகழ்வுகளையும்
மறக்க மாட்டார்,நானும் அப்படியே

கடந்த வருடம்

நடந்த நிகழ்வுகள் பல இருந்தும்
என் வாழ்வின் ஒரு சில

பெற்றோருடனும் உறவினருடனும்

சிறு பிரெச்சனைகள் வரினும்
அவர்களுடன் சந்தோசமாய்
கழித்த நாட்களே அதிகமாய் இருந்தது
கடந்த வருடத்தில் இது போன்ற
நாட்களே என் வாழ்கையில் நிறைந்திருந்தது

நண்பர்களை பொறுத்தவரை

அருகிலிருக்கும் நண்பர்களின்
உண்மையான முகமும்
முகமறியா நண்பர்களின் உண்மையையும்
உணர்ந்துகொண்டேன்
சில சமய சண்டைகள் மிகுதியாய்
என்னைக்காயப்படுதினாலும்
அது என் கவிதைகளின் பிறக்க
வழி செய்தது.சந்தோசமான நாட்களோ
மீண்டும் வரவேண்டுமென்ற
எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது

கடந்து வருடத்தின் முக்கியமாய்

மறதியை மறக்க நாட்குறிப்பு
எழுதவேண்டும் என்ற தீர்மானத்தையே
மறந்து போனதால் புது நாட்குறிப்பு
வெறும் வெள்ளைக் காகிதமாகவே
தீர்ந்து போனது

நண்பர்கள் வேலையை இருந்த

நேரத்தில் கணினியும் அலைபேசியும்
நண்பனாய் உறுதுணையாய் நின்றது

சில பழக்கங்களை விட

உறுதி ஏற்றும் அதை விட மனம்
மறுத்து விடாபிடியாய் பிடித்துக்கொண்டது

வீடும் வெளியிடமும் கூட என்னை

வெகுவாய் தாங்கியது
பிறந்தநாள் கொண்டாட்டங்களும்
அன்றைய வாழ்த்துக்களும்
நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது

மொத்தத்தில் கடந்த வருடத்தில்

இழப்புக்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும்
நான் ஒன்றும் பெரிதாய்
பெற்றுக்கொள்ளவும் இல்லை
சிறந்த நண்பர்களை தவிர

365 நாளின் நன்மைகளை

35 நிமிட நேரத்தில் எடுத்துச்சொல்ல
முடியாத காரணத்தினால்

கடவுளே...

கடந்து ஆண்டைப்போலவே
நல்லதோர் ஆண்டு பிறக்க
அது சிறந்த ஆண்டாக அமைய
எனக்கும், என்னைச் சேர்ந்த
என்  உறவுகளுக்கும்
வழிவகை செய்ய 

உன்னை நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறேன் ....

ஆடைகளில் மட்டுமல்ல
உங்கள் எண்ணங்களிலும்
புதுமை பொங்கட்டும்

அனைவருக்கும் 2012
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment