ஆம், என் மீது தான்
தவறென்று
ஒத்துக்கொள்கிறேன்
நான் அன்று
அவளை தூரத்தில்
நின்று ரசித்த நிமிடத்தில்
புன்கையை அருகில்
கண்ட நொடியில்
அல்லது ஏதோ ஒரு
தருணத்திலாவது
"அவள் அவளை மட்டுமே
எனக்கு பிடிக்கும்" என்று
மற்றவர்களிடம்
ஆயிரம் முறை சொன்னதை
அவளிடம் ஒரு முறை,
ஒரே முறையாவது
சொல்லியிருக்கலாம்
சொல்ல தவறியதால் தான்
தேர்வே எழுதா
மாணவன் நல்ல முடிவுக்காய்
காத்திருப்பது போல
நான் காத்திருந்திருக்கிறேன்
என் காத்திருத்தலுக்கு
சாதகமான
விடையே கிடைக்கவில்லை
இனி கிடைக்கபோவதுமில்லை
காத்திருத்தலின் கொடுமை அன்றே
புரிந்துவிட்டது எனக்கு
என் வாழ்கை
முழுவதும் அவள் நட்பாவது
தொடரவேண்டுமென்று நினைத்தவன்
என் வாழ்கையே அவள் காதல்
தானென்று மறந்ததால்
இன்றவள் நட்பையும் கூட
இழந்து தவிக்கிறேன்
ஒருவேளை அன்றே என்
விருப்பத்தை சொல்லி
அவள் மறுத்திருந்தாலும் கூட
அவள் நினைவுகளுடன்
வாழ்ந்திருப்பேன், இப்போதும் கூட
பெரியமாற்றமின்றி அதைத்தானே
செய்துகொண்டிருக்கிறேன் ??
இப்போது அவள் எனதில்லை
என்பது உறுதியும் ஆகிவிட்டது
இனி சொல்லாத காதலை
நினைத்தென்ன பயன் ??
கண்கெட்டவர்களுக்கு சூரிய
நமஸ்காரம் ஏன் என்பார்கள்
அவர்கள் சூரியனை
காணாவிடினும் அதன்
வெப்பத்தை உணர்வார்களே
அதுபோல்தான்
அவள் எனதில்லை என்றபோதும்
அழகிய அவள் நினைவுகள்
எப்போதும் என்னுடையதுதான்
அதுனடனே என்
காலத்தை கடத்தப்போகிறேன்
No comments:
Post a Comment