பல நாட்களாய் எதிர்நோக்கிய
பண்டிகை நாள் சண்டேயில் வருவதும்
பண்டிகை நாளன்று என்னவளுடன்
சண்டை வருவதும்
தவிர்க்கப்படவேண்டியது என்றாலும் ,
ஏதோ ஓர் வருடத்திலாவது இப்படி
மாட்டிக்கொள்கிறேன்
சண்டேயில் வந்தால்
அடுத்த நாள்
வேலை பற்றிய நினைவுகளும்
சண்டை வந்தால்,அடுத்த சந்திப்பு
பற்றிய கவலை,பயமும்
இந்த நொடியை
சந்தோசமாய் அனுபவிக்க
முடியமால் பண்ணுகின்றது
பண்டிகையும் அரைகுறையாய்
முடிந்து போகின்றது ..
No comments:
Post a Comment