காதலும் ஒரு வித
பயணம் தான்
பொதுவாய் பயணத்தில்
சேருமிடம் தூரமாய்
தோன்றும்
எனக்கும் அப்படித்தான்
என் பயணத்தில்
அவளை காணும் வரை
வாழ்க்கை மிகவும்
தூரமாய் தோன்றியது
கண்டபின்தான் ,
வாழ்க்கையின் சுவாரஸ்யமே
புரிகிறது....
என் வாழ்க்கை
பயணத்தில்
அவளை தேடியதின்
நோக்கம்,
அவள் , அவளால்
மட்டும் தான்
என்னை
இந்த உலகத்தின்
துன்பங்களை
மறக்கச்செய்து
என் தாயின்
கருவறையில் நான்
பெற்ற அமைதியை
திரும்பப்பெற
வழி காட்ட முடிகிறது
No comments:
Post a Comment