நானும் ஒரு கவிஞனாய்
கவிதைகளின் வார்த்தைகளை
புரிந்துகொள்கிறேன் ...
என் கவிதைகள் என்னவள் மேல்
பொறாமை கொண்டு இருக்கின்றது...
இருக்கத்தானே செய்யும்
நான் எழுதிய கவிதைகள்
அருகிலிருக்க அழகிய புதுகவிதையாம்
என்னவளை நான் ரசித்துக் கொண்டிருந்தால்..
அவற்றை சமாளிக்க
"மனதில் அவள் வந்ததால் தான்
எழுத்தில் நீங்க வந்தீர்கள்" என்றேன்
சமாதனம் அடையவில்லை
படைத்தவன் தலையிலயே
கை வைப்பது இதுதானோ ??
என்று நொந்து கொண்டேன் என்னை
என்னவளை எனக்கு பெற்று தந்தது
என் கவிதைகள்,
என் கவிதைகளோ அவளை பற்றியது
இதில் எதற்கு முக்கியத்துவம் தருவது ??
இறுதியாய் கேட்டது
நானா?? அவளா ??
என்ற கவிதைகளிடம்
எனக்கு தெரியவில்லை
நான் உங்களை படிக்கும் போது
என் காதலியை மறக்கின்றேன்
என் காதலியை பார்க்கும் போதுதான்
உங்களை படைக்கின்றேன்
இருப்பினும்
என்னவள் அருகே இருப்பின்
உங்களைப்போல் ஆயிரம்
கவிதைகள் படைப்பேன்
அனால் என் ஆயிரம் கவிதைகள்
சேர்ந்தாலும் அவளைப்பெற்று
தரமுடியாதென்றேன்
இப்போதுதான்
என் தரப்பு உண்மைகளையும்
புரிந்துகொண்டு என்னைக்காட்டிலும்
என்னவளை
அதிகமாய், அழகாய் வர்ணிக்கிறது
என் கவிதைகள் ...
அதை சேர்ந்தே ரசிக்கின்றோம்
நானும் என்னவளும்
No comments:
Post a Comment