எனக்காய் பிறந்தவள்
அவள்
என்ன வாழ்க்கை என்று
சலித்துக்கொண்டிருந்தவனுக்கு
வாழ்க்கையின் மகத்துவத்தை
கற்றுதத்தந்த காரிகையவள்
அவள்
என்ன உலகம் இது
என்றிருந்தவனை
தன் அழகால் இவ்வுலகின்
அழகை மறைத்து
என் முழுநேர
உலகாய் மாறிப்போனவள்
அவள்
எனக்கே எனக்காய் பிறந்த
என்னவள்
No comments:
Post a Comment