Sunday, November 6, 2011

என் உறுதிமொழி
















சுற்றமே !!!
இதோ என் வாழ்நாளுக்கான
என் உறுதிமொழி

நான்
எனக்கு பிடித்ததை போல் வாழ,
எனக்கு பிடித்தபடி பேச,
எனக்கு மட்டும் பிடித்தபடி நடந்துகொள்ள,
கற்றுக்கொள்ளப்போகிறேன் ...

எனக்காய் நீ என்ன மாறினாய் ??
உனக்காய் நான் மாற ??
என் பேச்சிற்கு நீ என்ன மதிப்பளிதாய்
உன்னை நான்  மதிக்க ??
இனி நான் இது தான்!!!
இப்படி தான்!!!

உனக்குப் பிடித்தது தான் எனக்கும் பிடிக்க வேண்டுமோ ??
இது என்ன சர்வாதிகாரம் ??
உன் சிந்தனைகளை ஒன்றும்  குறை சொல்லவில்லை
உன்மேல் என் சிந்தனைகளை திணிக்கவும் இல்லை
ஆனால் நீயோ
நான் சிந்தனை செய்வதையே தவறென்றாய்

எனக்காய் ஒரு பார்வை
சில வார்த்தைகள் இருக்ககூடாதோ ??
உனக்கு பிடித்தபடி நான்
இருக்க வேண்டுமானால் நான் நானல்ல
நீ , நீயே தான் ...
நீ சொல்வதுதான் சரி என்றால்
நான் எதற்கு ??
என் பேச்சுரிமை எதற்கு ??
நீ மட்டுமே ஜெய்க்க வேண்டுமானால்
இந்த போட்டி எதற்கு??
அநேகமாய் நீ கண்டதெல்லாம்
உனக்கு விட்டுக்கொடுப்பவனோ  இல்லை

உனக்கு பயந்த கோழையோ
தான் போலும்
சோதனைகள் பல வந்தாலும் கூட
இதோ
உன்னை எதிர்த்து என் முதல் குரல் ..

நானும்
மற்றவருக்காய் விட்டுக் கொடுத்தது
இதோடு  போதும் ,
என் முட்டாள்தனமறிந்த உலகம்
என்னை அதன் முகம்
பிரதிபளிக்கும் கண்ணாடியாக்கப்பார்க்கிறது..

என் தனித்துவத்தை அழித்து
ஆணவமாய் சிரிக்கின்றது
இனி எனக்கென்ற தனி உலகம்
இதில் நானே ராஜா
நானே மந்திரி
என் சட்டம், இனி என்றும்
என் கையில் ...

யாருக்கும் பயப்படாமல்
என் வாழ்க்கைப்பயணத்தில்
எனக்காய் வாழ்பவர்களுக்கும் 
என்னைப்புரிந்து
என் நட்பை இன்பமாய்
சுமக்கும் நண்பர்களுடன் மட்டுமே 
இனி  பயணிக்கபோகிறேன்

No comments:

Post a Comment