ஓர் கவிஞன்
பல நாட்களாய்
யோசித்து எழுதிய தன்
கவிதைக்கு
தலைப்பு கிடைக்காமல்
தடுமாறி
கைக்கு கிடைத்த
தலைப்பை வைப்பது போல்தான்
நம் கடவுளும் கூட
முதல் சிறந்த கவிஞன் ;
அவர்
பலமுறை யோசித்துவிட்டு
படைத்த
சில மனிதர்களுக்கு மட்டும்
கைக்கு கிடைத்த
தலையெழுத்தை
கிறுக்கிவிடுகிறார்...
சில கிறுக்கல்கள் மட்டும்
கவிதைகளாய் மாறுகின்றன..
மற்றவைகள்
வெறும் கிறுக்கல்களாய்
குப்பை தொட்டியை சேர்கின்றன ..
என் தலையெழுத்து
கவிதையா ??
கிறுக்கலா ??