Wednesday, November 23, 2011

கவிதை கிறுக்கல்கள்

ஓர் கவிஞன் 
பல நாட்களாய்
யோசித்து எழுதிய தன்
கவிதைக்கு
தலைப்பு கிடைக்காமல்
தடுமாறி
கைக்கு கிடைத்த
தலைப்பை வைப்பது போல்தான்
நம் கடவுளும் கூட
முதல் சிறந்த கவிஞன் ;

அவர்

பலமுறை யோசித்துவிட்டு
படைத்த
சில மனிதர்களுக்கு மட்டும்
கைக்கு கிடைத்த
தலையெழுத்தை
கிறுக்கிவிடுகிறார்...

சில கிறுக்கல்கள் மட்டும்

கவிதைகளாய் மாறுகின்றன..
மற்றவைகள்
வெறும் கிறுக்கல்களாய்
குப்பை தொட்டியை சேர்கின்றன ..

என் தலையெழுத்து 

கவிதையா ??
கிறுக்கலா ??  

எனக்காய் பிறந்தவள்
















அவள்
என்ன வாழ்க்கை என்று 
சலித்துக்கொண்டிருந்தவனுக்கு
வாழ்க்கையின் மகத்துவத்தை
கற்றுதத்தந்த காரிகை
வள்

அவள்

என்ன உலகம் இது
என்றிருந்தவனை
தன் அழகால் இவ்வுலகின்
அழகை மறைத்து
என் முழுநேர
உலகாய் மாறிப்போனவள்

அவள்

எனக்கே எனக்காய் பிறந்த
என்னவள்

வேண்டுதல்













இறைவா  !!!
நிலவு கரையுடன்
நட்பு சில குறையுடன்
இயற்கை தான்
இதை ரசித்துக்காண
கண்களும், விரும்பி
ஏற்றுக்கொள்ள மனதும்
வேண்டிக்கொள்கிறேன்...

Friday, November 11, 2011

தங்கையின் பிறந்தநாள்












இன்று 
தங்கையின் பிறந்தநாள்
இது மழைகாலம்
என்பதை அறிந்திருந்தும்
அப்பாவியாய் கேட்டாள்...
என் பிறந்தநாளில்
மட்டும் ஏன் இப்படி மழை
கொட்டித்தீர்க்கிறதென்று

அவள்
அழுவதை
காணமுடியதவனாய் சொன்னேன் ...
பரந்து விரிந்த இந்த வானத்தில் பல
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடந்தும்
என் தங்கையை போன்றதோர்
அழகிய நட்சத்திரத்தை
பூமிக்கு கொடுத்தபடியினால்
இந்த வானம்
பொறாமையினால்
இப்படி அழுகின்றதென்று..
இதைக்கேட்டவுடன் மழையுடன்
மின்னலும் பளிச்சிட்டது
அவள் புன்னகையில்
 

காத்திருக்கிறேன்

 












ரோம பேரரசு
பற்றி எறியும் போது
பிடில் வாசித்தானாம் மன்னனொருவன்
நானும் தான் ...
என் வாழ்கையே
வீணாகிக்கொண்டிருக்கும் போதும் கூட 

நாளைய கவலைகளை மறக்கடிக்கும்
முகப்புதகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் ...
நஷ்டம் மட்டுமே மிஞ்சும் என்றறிந்தும்
இதில் என் துக்கத்தையும்
சந்தோசத்தையும் முதலீடாக்கிருக்கிறேன் ...
இதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன்
என்னையும்
என் மகிழ்ச்சியும்
இந்த மாய உலகிலிருந்து மீட்டெடுக்க
எனக்கென்று ஒரு அவள்
என்னவளாய் என்று வருவாளோ ???
காத்திருக்கிறேன்  ஆர்வமுடன் !!!
ஆவலுடன்!!!

மௌனத்தின் வார்த்தைகள்
















எங்கள்
முதல் சந்திப்பிலிருந்து
என்று சந்தித்தாலும்
முதலில் பேசிக்கொள்வது
எங்கள் கண்களின் வார்த்தைகளும்
உதடுகளின் மௌனமும் தான் ...

Sunday, November 6, 2011

என் உறுதிமொழி
















சுற்றமே !!!
இதோ என் வாழ்நாளுக்கான
என் உறுதிமொழி

நான்
எனக்கு பிடித்ததை போல் வாழ,
எனக்கு பிடித்தபடி பேச,
எனக்கு மட்டும் பிடித்தபடி நடந்துகொள்ள,
கற்றுக்கொள்ளப்போகிறேன் ...

எனக்காய் நீ என்ன மாறினாய் ??
உனக்காய் நான் மாற ??
என் பேச்சிற்கு நீ என்ன மதிப்பளிதாய்
உன்னை நான்  மதிக்க ??
இனி நான் இது தான்!!!
இப்படி தான்!!!

உனக்குப் பிடித்தது தான் எனக்கும் பிடிக்க வேண்டுமோ ??
இது என்ன சர்வாதிகாரம் ??
உன் சிந்தனைகளை ஒன்றும்  குறை சொல்லவில்லை
உன்மேல் என் சிந்தனைகளை திணிக்கவும் இல்லை
ஆனால் நீயோ
நான் சிந்தனை செய்வதையே தவறென்றாய்

எனக்காய் ஒரு பார்வை
சில வார்த்தைகள் இருக்ககூடாதோ ??
உனக்கு பிடித்தபடி நான்
இருக்க வேண்டுமானால் நான் நானல்ல
நீ , நீயே தான் ...
நீ சொல்வதுதான் சரி என்றால்
நான் எதற்கு ??
என் பேச்சுரிமை எதற்கு ??
நீ மட்டுமே ஜெய்க்க வேண்டுமானால்
இந்த போட்டி எதற்கு??
அநேகமாய் நீ கண்டதெல்லாம்
உனக்கு விட்டுக்கொடுப்பவனோ  இல்லை

உனக்கு பயந்த கோழையோ
தான் போலும்
சோதனைகள் பல வந்தாலும் கூட
இதோ
உன்னை எதிர்த்து என் முதல் குரல் ..

நானும்
மற்றவருக்காய் விட்டுக் கொடுத்தது
இதோடு  போதும் ,
என் முட்டாள்தனமறிந்த உலகம்
என்னை அதன் முகம்
பிரதிபளிக்கும் கண்ணாடியாக்கப்பார்க்கிறது..

என் தனித்துவத்தை அழித்து
ஆணவமாய் சிரிக்கின்றது
இனி எனக்கென்ற தனி உலகம்
இதில் நானே ராஜா
நானே மந்திரி
என் சட்டம், இனி என்றும்
என் கையில் ...

யாருக்கும் பயப்படாமல்
என் வாழ்க்கைப்பயணத்தில்
எனக்காய் வாழ்பவர்களுக்கும் 
என்னைப்புரிந்து
என் நட்பை இன்பமாய்
சுமக்கும் நண்பர்களுடன் மட்டுமே 
இனி  பயணிக்கபோகிறேன்