நான் மட்டும் தேர்வறையில்
ஒன்றும் எழுதாமலே
உட்கார்ந்திருந்தேன்...
நேற்று சுமாராய் படித்ததை
ஞாபகப்படுத்த முயற்சிக்க
நினைவிற்கு வந்ததெல்லாம்
தேவதையாம் அவள் நினைவு
கடைசி சில மணி நேரமென
கண்காணிப்பாளர் கண்டிக்க
கேட்டிருந்த கேள்விகளுக்கெல்லாம்
அவள் பெயரை எழுதி
வைத்துவிட்டு வீடு திரும்பினேன்
காரணம், எனக்கு தெரிந்த
ஒரே பதில் நீ தான்,
நீ மட்டும் தான்.....

No comments:
Post a Comment