இறந்த பிறகு
மனிதனுக்கு மட்டும்
சொர்க்கம் நரகம் என்றுண்டாம்
நானறியேன்..
இவற்றில் எல்லாம் ஒருபோதும்
எனக்கு நம்பிக்கை இல்லை
என்றபோதும் ஒருவேளை
அவைகள் இருந்திருந்தால்
நானிறந்தால் எது கிடைக்கும் என
பலமுறை சிந்தித்துப் பார்த்திருக்கிறேன் ...
சொர்கமா?? நரகமா?? என்று
இவ்வுலகில் நான் வாழ்ந்த
என் வாழ்க்கை கணக்குகள்
ஆராயப்ப்படுமாயின் அதில்
துரோகம் என்னும்
எண்ணைச்சட்டியில் பல முறை
பொரிக்கப்படிருக்கிறேன்,
தீய எண்ணங்கள் என்னும்
விஷத்தால் தாக்கப்பட்டிருக்கிறேன்
சிலரது வார்த்தைகள் எனும்
அம்பினால் துளைக்கப்பட்டிருக்கிறேன்,
பொய்கள்,பொறமை வஞ்சம்
என்னும் நோயினால் அவதிப்படிருக்கிறேன்..
ஏமாற்றம்,அவமானம் என்னும் சுத்தியால்
பொடிப்பொடியாய் நொறுக்கப்பட்டிறுக்றேன்
என் ரத்தமெல்லாம் இழந்திருக்கிறேன்...
இதைக்காட்டிலுமா அந்த புது நரகம்
கோரமாய் இருந்துவிடப்போகிறது?
ஆனால் இவற்றை காரணம் காட்டி நான்
நான் சுவர்க்கம் வேண்ட விரும்பவில்லை
என்னிடம் இரண்டில் ஒன்று
தேர்வு செய்ய சந்தர்ப்பம் கிடைக்குமாயின்
நான் மறுபடியும் நரகமே தரும்படி
வேண்டிக்கொள்வேன்
காரணம்,பல்வேறு கஷ்டங்களை
அன்பவித்திருந்தாலும்
நான் பிறந்ததால் தானே இப்படி
இவையெல்லாம் எனக்கு நடந்தது
இவ்வுலகில் நான் பிறந்த தவறிற்கு
தண்டனை ஒருவேளை அந்த
நரகத்திலாவது எனக்கு கிடைக்கட்டும்
காத்திருக்கிறேன் அந்நரகத்தைக்காண
ஏற்றுக்கொள்கிறேன் மகிழ்வுடன்
No comments:
Post a Comment