Monday, January 30, 2012

பாலை












என்னவள்
துன்பங்களாலும் தோல்விகளாலும்
வறண்டு, வற்றிப்போன
 
என் மனதை வளமாக்க
எந்நேரமும் ஓயாமல்
அழகிய வார்த்தை மழையால்
மாற்ற முயற்சி செய்துகொண்டிருந்தாள்

அவள் முயற்சி வீண் போகததாய்

கண்ணீரும் தீர்ந்து போய்
பாலையாய் மாறிப்போன  என்
கண்களில் சிறு கண்ணீரும்
ஆனந்தமாய் நிறையத் துவங்கியது
இந்த கல்லிலும் சிறு உயிர்த்துளிர்
விட ஆரம்பித்தது

அது ஏனோ இந்நாளில்

மண்வாசம் வீசுவதில்லை
என் மேகம் கருக்கவில்லை
மழையும் பொழியவில்லை 

ஆம்

என்னவள் சில நாட்காளாய்
என்னிடம் பேசுவதில்லை
என்னிடம் பேசாமல் இருப்பது
எனக்கான தண்டனையென்று
நினைக்கின்றாள்  போலும்
இந்த தண்டனையும் கூட
மனம் நொந்தபடி ஏற்றிருப்பேன்
ஆனால் இதன் காரணம் கூட
இன்னும்  எனக்கு தெரியவில்லை
"காரணம் சொல்லாமல் தண்டனை"
உயிர் மட்டும் போகாமல்
உடல் தொங்கும் தூக்கென்பேன்

ஒரு வேளை பழைய நிலைக்கு

மாறிப்போகிறேனா என்று
ஆராய்ந்து பார்க்கிறாளோ ??
என்னை பழைய நிலைக்கு மாற்றப்
பார்க்கிறாளா இல்லை
அவள் தான் என்னை மாற்றினாள்
என்ற அகந்தையா??, அவளைத்தவிர
யார் அறிவார் ???...

நான் வழி தவறி நடக்கும் போது
வழிகாட்டியாய், நான் இருட்டில்
நடக்கும் போது வெளிச்சமாய்,
சவமாய் மாறும் போது புது உயிராய்
உயிர் தரும் சுவாசமாய்
மட்டுமே அவள் வருவாளாகின்
அவள் இப்போது வரட்டும்
இப்போது வழி தவறி இருட்டில் தான்
சவமாய் நடந்து கொண்டிருக்கிறேன்

நான் சோகமாய் இருக்கும் போது

ஆறுதலாய் பேச
நான் தவறுகள் செய்யும் போது
என்னை திருத்த தான் அவள் வார்த்தைகள்
இருக்குமானால், 

அவளே இன்றி அவளின் வார்தைக்களுமின்றி

நான் மட்டும் பூஞ்சோலையாய்
இருந்தென்ன பயன்...
பழையபடியே
வானம் பார்த்த,மழையே கண்டிராத
பழைய பாழ் நிலமாய்
மாறவும் துணிந்துவிட்டேன்...

ஒரு வேளை பழைய நிலைக்கு

என்னை மாற்றுவது தான்
உன் எண்ணமாயின், உன் ஆசையை
நிறைவேற்ற ஒரு வாய்ப்பாய்,
உனக்காய் எதுவும்
செய்தது இல்லையே என்ற
என் நெடுநாளைய வருத்தத்தை
போக்கிய பலன் உன்னையே சேரும்

நீ மனமாறுவாய் என்று
பெருமளவில்
நம்பிக்கை இருந்தாலும்
மனதுக்குள் மாறாமல் போனால்
என்ற நெருடலும் இருக்கத்தான்
செய்கிறது..
நீ இந்த வீணாய்ப்போன
நிலத்தின் மேல் பெரும் மழையாய்
வேண்டாம் வெறும்
கானல் நீராகவது நின்று
என்னை காப்பற்றிக்கொடு

No comments:

Post a Comment