Saturday, December 31, 2011

டிசம்பர் 31














இதோ இந்த ஆண்டின்
கடைசி நாளில்
இல்லையில்லை புத்தாண்டின்
முந்தய நாளில்...
எல்லோரும் புதுவருடத்தை
எப்படி வரவேற்கலாம் என்று
யோசித்துக்கொண்டிருக்க
நானோ பழைய வருடத்தை
வழியனுப்ப வந்திருக்கிறேன்
எப்படி புதுவருட கொண்டாத்தை
கொண்டாடலாம் என்று எண்ணிக்
கொண்டிருப்போர் மத்தியில்
பழைய வருடத்தை நான் எப்படி
கொண்டாடிக்கழிதேன் என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
கடந்த வந்த பாதையை மறக்காதவர்
எவரும் கடந்த வருடத்தின் நிகழ்வுகளையும்
மறக்க மாட்டார்,நானும் அப்படியே

கடந்த வருடம்

நடந்த நிகழ்வுகள் பல இருந்தும்
என் வாழ்வின் ஒரு சில

பெற்றோருடனும் உறவினருடனும்

சிறு பிரெச்சனைகள் வரினும்
அவர்களுடன் சந்தோசமாய்
கழித்த நாட்களே அதிகமாய் இருந்தது
கடந்த வருடத்தில் இது போன்ற
நாட்களே என் வாழ்கையில் நிறைந்திருந்தது

நண்பர்களை பொறுத்தவரை

அருகிலிருக்கும் நண்பர்களின்
உண்மையான முகமும்
முகமறியா நண்பர்களின் உண்மையையும்
உணர்ந்துகொண்டேன்
சில சமய சண்டைகள் மிகுதியாய்
என்னைக்காயப்படுதினாலும்
அது என் கவிதைகளின் பிறக்க
வழி செய்தது.சந்தோசமான நாட்களோ
மீண்டும் வரவேண்டுமென்ற
எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது

கடந்து வருடத்தின் முக்கியமாய்

மறதியை மறக்க நாட்குறிப்பு
எழுதவேண்டும் என்ற தீர்மானத்தையே
மறந்து போனதால் புது நாட்குறிப்பு
வெறும் வெள்ளைக் காகிதமாகவே
தீர்ந்து போனது

நண்பர்கள் வேலையை இருந்த

நேரத்தில் கணினியும் அலைபேசியும்
நண்பனாய் உறுதுணையாய் நின்றது

சில பழக்கங்களை விட

உறுதி ஏற்றும் அதை விட மனம்
மறுத்து விடாபிடியாய் பிடித்துக்கொண்டது

வீடும் வெளியிடமும் கூட என்னை

வெகுவாய் தாங்கியது
பிறந்தநாள் கொண்டாட்டங்களும்
அன்றைய வாழ்த்துக்களும்
நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது

மொத்தத்தில் கடந்த வருடத்தில்

இழப்புக்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும்
நான் ஒன்றும் பெரிதாய்
பெற்றுக்கொள்ளவும் இல்லை
சிறந்த நண்பர்களை தவிர

365 நாளின் நன்மைகளை

35 நிமிட நேரத்தில் எடுத்துச்சொல்ல
முடியாத காரணத்தினால்

கடவுளே...

கடந்து ஆண்டைப்போலவே
நல்லதோர் ஆண்டு பிறக்க
அது சிறந்த ஆண்டாக அமைய
எனக்கும், என்னைச் சேர்ந்த
என்  உறவுகளுக்கும்
வழிவகை செய்ய 

உன்னை நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறேன் ....

ஆடைகளில் மட்டுமல்ல
உங்கள் எண்ணங்களிலும்
புதுமை பொங்கட்டும்

அனைவருக்கும் 2012
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வெற்றி

 














என் வலைப்பதிவு
துவங்கிய ஒரு  வருடம் 

முடியப்போகிறது
நூறு கவிதைகளை
முடித்துவிடுவேனா என்ற
சந்தேகமா உங்களுக்குள் 

தோன்றலாம்..

சரி ஒரு கவிஞனிடம்
கேட்டுப்பாருங்கள்
ஒரே நாளில்
ஆயிரம்  கவிதைகள் 

எழுதித்தரும்படி 
உறைந்தே போய்விடுவான் 

ஆனால் என்னால் கூடும்

அதுவும் ஒரே நொடியில் ...

இது தலைக்கனம் அல்ல
நான் என்மீது கொண்ட நம்பிக்கை

இதற்கு 
காரணம் என்னவளின்
கண்களை நேருக்குநேர்
கண்டவன் நான்
அதில் மட்டுமே எத்தனை
விந்தைகள்
அது தரும் கோடி சிந்தைகள்...
அவள் கண்களை வைத்தே
அத்தனை கவிதைகள்
படைக்கமுடியுமாயின்
அவள் ஒரு சேர
என் மனதில் கொண்டவன்
நான் ...


இந்த உலகில் வாழ்ந்த
வாழ்ந்துகொண்டிருகின்ற
இனி வாழும் கவிஞர்
எல்லோருக்கும் சேர்த்து
கவிதை மழை பொழிவேன்

மறதி
















காதலிக்கும் போதும் சரி
காதலை விட்டாலும் சரி
மறதி தான் புத்தியின்
மிகப்பெரிய தொல்லை
அது சில வேளைகளில்
மறக்க வேண்டியதை
மறக்க வேண்டிய நேரத்தில்
மறக்க மறுக்கிறது
மற்றொரு சமயம்
கண்டிப்பாய் நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டியதை
மறந்துவிடுகிறது

காதலிக்கும் போது

தன் பிறந்தநாளையே மறந்தாலும்
காதலியின் அலைப்பேசி எண்ணை
மறப்பதில்லை, ஆனால்
அவள் பிறந்தநாள் அன்று
அவளை வாழ்த்தவும்
கோயில் அர்ச்சனையின் போது
அவள் ராசியையும், அவளை
சந்திக்க அவள் சொன்ன நேரத்தையும்
மறந்து தொலைக்கின்றது
இது பெரிய பூகம்பத்தையும்
ஏற்படுத்தி சிலவேளைகளில்
காதலையும் பிரிக்கின்றது

ஒரு வேளை காதலியை

பிரிய நேர்ந்தாலும் இல்லை
காதலை இழக்க நேர்ந்தாலும்
அவளது பழைய நினைவுகளை
எல்லாம் எப்படி முயன்றும்
மறக்க மறுக்கிறது

நான் கற்றுக்கொண்டது

மறதி என்ற அரக்கனிடம்
காதலை பொறுத்தவரை
ஜாக்கிரதையாய் தான்
இருக்கவேண்டும்

ஆயுத எழுத்து















எப்போதும் என் கவிதையை
படித்துவிட்டு வாய் விட்டு
பாராட்டும் என்னவள்
இந்தமுறை
ஒன்றுமே சொல்லாமல்
தன் கண்மை தொட்டு
புள்ளிவைத்தாள்...


கண் திருஷ்டி படாமல்
காத்து நிக்கும் என்றதில்
எல்லாம் எனக்கு
நம்பிக்கையில்லை
என்றபோதிலும் அவள்
நம்பிக்கையில், என் கவிதை
மேல் உள்ள அக்கறையில் தான்
அவள் அவ்வாறு செய்தாள்
என்றெண்ணி நானும் கேளாமல்
விட்டுவிட்டேன்...


வித்தியாசமான கவிதைகளின்
தொகுப்பில் என் கவிதை
ஆயுத எழுத்து கொண்டு
கவிதை எழுதியதாய்
முதலிடம் பெற்றது ...


நான் பின்பு தான்
உணர்ந்துகொண்டேன்
எல்லா தீய எண்ணங்களில்
இருந்தும் என்னையும்
என் கவிதைகளையும் காத்து
நிற்கும் ஆயுத எழுத்தாக
இருந்தது அவள் கண்மையினாலான
புள்ளிதானென்று ....

Friday, December 30, 2011

மொழி
















எனக்கு கவிதை எழுத
கற்றுத்தந்த தேவதையே
அதை உன் மொழியிலையே
எழுத சொல்லித்தந்திருக்க கூடாதா
காரணம்
காதலை கற்பித்ததோடன்றி
என் திறமையை வெளிக்காட்ட
என்னைக் கவிஞன் ஆக்கி
எனக்காய் என் தாய்மொழியை
கற்றுக்கொண்டு, என் கவிதைகளை
படித்து ரசிக்கின்றாய் ...
என் கவிதைகளின் முதல் வாசகியாய்
விமர்ச்கியாய் மாறிப்போனாய்
என்னை விட என் கவிதைகளின் மேல்
நீ அதிக பிரியம் கொண்டாய்
என்னை மட்டுமல்ல எனக்காய்
என்னைச் சேர்ந்தவற்றையும்
எனக்கு பிடித்தவைகளையும்
கூட ஏற்றுக்கொண்டாய்
இப்படி நீ எனக்காய் செய்தது பல

உனக்காய் நான் என்ன செய்தேன்

நான் எழுதிய பல கவிதைகளும்
உன்னைப்பற்றியது  தான் என்று
மற்றவர் சொல்லலாம்
அனால் அது போதாது பெண்ணே

என் ஏக்கத்தை நிறைவு செய்ய

எனக்குள் ஒரு ஆசை
நீ பிறந்தது முதல் உன் அழகிய
இதழ்களில் விளையாடிய உன்
மொழியில் உன்னை பற்றிய
கவிதை ஒன்று இயற்றிட வேண்டும்
அதை நீ வாசித்திட வேண்டும்
படித்து வியந்திட வேண்டும் 

மொத்தத்தில் உன் மொழி பேசியே 
நம் காதல் வளர்ந்திடவேண்டும்
என் ஆசை நிறைவேற

காலத்தை வேண்டி நிற்கிறேன்

காந்தவியல்











பெண்ணே
காந்தவியல் கொள்கை
கொண்டவள் நீயோ 
குழந்தையின் சிரிப்பு
வைரமுத்துவின் கவிதைகள் ,
வெறிச்சோடிய கடற்கரை ,
மேகமில்லா வானம் ,
முழு நிலவு இப்படி
எனக்கு பிடித்த எல்லாமே
உனக்
கும் பிடித்திருந்தும் கூட
என்னை பிடிக்கவில்லை என்று
உதறித் தள்ளினாய் 


மறுபுறம் உன் அழகிய பார்வையினால்
உன் உதவும் எண்ணங்களால்
என்னை ஈர்க்கின்றாய் 


நான் என்ன தான் செய்ய இப்போது
துரத்துவதால் ஒதுங்கிவிடவா??
ஈர்ப்பதால்  ஒட்டிக்கொள்வதா??
நீ தான் எனக்கு புரியும்படி
தெளிவுபடுத்த வேண்டும்...

எனக்காக செய்வாயா??

ஓர் வாக்குவாதம்















மனதுக்கும் புத்திக்கும்
ஓர் வாக்குவாதம்
உன்னை தான் அவள்
பிரிந்து சென்றாளே,
மறந்தும் விட்டாளே
நீயும் அவளை மறந்துவிடு
என்றது புத்தி 


எனக்காய் பிறந்தவள் அவளே
மனதில் நிறைந்தவள்  அவளை
எப்படி மறக்க முடியும் ??
என்றது நெஞ்சம் 


எதன் பேச்சை கேட்பது
ஒரு காலத்தில் அவளுக்காய்
யோசித்து கவிதைகளாய்
கொட்டியது புத்தி தான்
மனமோ அவளை வேண்டாமென்றது 


அவள் என்னை விட்டு 

விலகிச்சென்றதால் இவை இரண்டும் அதன் 
கருத்துக்களை மாற்றிக்கொண்டது
நான் இப்போது எதன் பக்கம் பேச
மதில் மேல் பூனையாய் நான்
செய்வதறியாது நிற்கிறேன்...
இதற்கு காரணம் என்னவளின் பிரிவு 


புத்தியே, மனமே 

அவள் பிரிந்து சென்றுவிட்டாள்
என்பது நிதர்சனமான உண்மை
 
இனி நீங்கள் சண்டையிட்டு
பிரயோஜனம் இல்லை
அவள் இல்லாத நாட்களிலாவது
சுயமாய் என்னை நடக்கவிடுங்கள்
என் எதிர்காலத்தயாவது
நல்ல படியாய் அமைத்துக்கொள்கிறேன்
கடந்த கால
வாழ்கையின் நினைவுகளுடன்

Thursday, December 29, 2011

மது













காதலும் மதுவைப்போன்றது தான்
இரண்டிற்கும் பல ஒற்றுமைகள்
இருக்கத்தான் செய்கின்றது
உதாரணமாய் இரண்டுமே 

தன்னையே தானே மறக்க, அழிக்க
மனிதன் எடுக்கும் முயற்சி,
இரண்டில் விழுந்தவனும்
அதை விடுவது கடினம் தான்..


ஆனால் இரண்டிற்கும்
ஒரே ஒரு வேற்றுமை தான்
மது அதிகமாய் உட்கொண்டால்
மனிதனை அழித்துவிடும்
காதலோ அதிகம் வெளிப்படுத்தினால்
தான் மனிதனை வாழவைக்கும் 


என்னை பொறுத்தவரை நான்
இரண்டுமே பழக்கமில்லாதவன்
பழகிக்கொள்ளாதவன்

நம்பிக்கையின்மை
















என் கொல்லும் மௌனம்
கவிதையை படித்துவிட்டாய்
என்று அறிந்து கொள்ள முடிகிறது,
வார்த்தைகளை நீ வீசிய போது..
தேன் கூட்டை கலைத்தது போல்
என்னமாய் ஒரு இரைச்சல்

உன் மௌனத்தை ஏன்
கலைத்தேன்
என்று எனக்கு நானே
இப்போது புலம்பிக்கொண்டு
இருக்கிறேன் 


அமைதிக்கு பின் புயல்
வருமென்று அறியாமல் போனேனே
என்னுடன் நீ பேசாமல் இருப்பதன் 

வலிகளைத்தானே என் கவிதைகளில்
சொல்லிருந்தேன்.அதில்லென்ன
உனக்கு கோபம் பிறந்தது???

இந்த கோபமும் கூட என்னை தவிர்க்க 
நீ எடுத்துக்கொண்ட காரணம் தானோ ??

உண்மையான நட்பிருந்திருந்தால்
திரும்பவும் முன்பைப்போல் இருப்பதாய்
நடித்திருக்கமாட்டாய்

உனக்கு நட்பை காட்டிலும்
நடிப்பு அதிகமாய், தெளிவாய் வருகிறது
என்பதை நிரூபித்து காட்டிவிட்டயே!!
என்னை ஒவ்வொரு முறையும்
முட்டாளாக்கி பார்ப்பதில் உனக்கென
அவ்வளவு ஆனந்தம்??


நீ முன்பைப்போலில்லை என்று
உன் வார்த்தைகளே காட்டிவிட்டதே...
மௌனத்தால் ரணமா
க்கிவிட்டவள் இன்று
வார்த்தைகளால்
கொல்லுகின்றாள்

இப்போது வார்த்தைகளாலும்,
என்னை பொருட்படுத்தாமல் விடுதலாலும்
மிகவும் வாதிக்கின்றாயே.


நீ, என்னை தவிர்க்க யார்யாரோ
உனக்கு நண்பனாகி விட்டதாய் எனக்கு
காட்டுகிறாய், அவர்களிடம் மட்டுமே
பேசுகிறாய்.
என்றுமே நான் அவர்களைக்கா
ட்டிலும்
சில படிகள் மேலென்று உணராயோ ???

இன்று நன்றாய் பேசுவதற்கு கூட
அப்படி யோசிக்கிறாயே
 

உன் வார்த்தைகளை விட
என் மேல் நம்பிக்கையில்லாமல்
போனவளாய் என்?? எதற்கு
பேச வேண்டும் என்ற உன்
கேள்விகள் தான் மிகக்கொடுமை

நட்பின் அஸ்திவாரமே
நம்பிக்கையும் புன்னகையும் தான்
என்னில் நீ நம்பிக்கை இழந்தாய்
உன்னால் நான் புன்னகை இழந்தேன்
மொத்தத்தில் நாம் நம் நட்பை
சுத்தமாய் இழந்துவிட்டோம்

இனிமேலும் உன்னிடம்
எனக்கென பேச்சு என்றும் கூட
யோசித்துவிட்டேன்
நீ நடித்துக்கொண்டிருந்தாலும்
என்னுடையது உண்மையான
நட்பென்பதால் இன்றும் நீ
மாறிவிடுவாய் என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன் ...
என்னை தவிர்க்க நீ
என்மேல் ஆயிரம் புகார் சொல்லியும்
அதை நான் ஏற்றுக்கொண்டு
என் வருத்தங்களை சொல்லுகிறேன்
ஆனால் இது எதுவரை

நானோ என் இறுதிவரை என்
நட்பை தொடர விரும்புகிறேன்
நீயோ உன் நட்பு
இன்றே இறுதி என்கிறாய் 


எல்லாவற்றிலும் பொறுத்துப்போவதால்
தான் என்னை இழிவாய் நினைத்துவிட்டாயோ
நீயும் உன் நட்பும் எனக்கு தேவை என்றே
அவ்வாறு நடந்து கொண்டேன் ஆனால் நீயோ
அதை பொருட்படுத்த மறுக்கின்றாய்
இனி கவலைகொள்ளதே
என் ஏமாளித்தனத்தை நான் உணர்ந்தேன்
நட்பே தேவையில்லை என்றபோது
உன்னை பற்றிய எண்ணம் எதற்கெனக்கு
 

போதுமடி!!! இதோடு போகட்டும்
என் வாழ்க்கையில் நீ படுத்திய பாடு
இனி என் வாழ்கையில் நீ
இல்லாமலும் நான் சந்தோசமாய்
இருப்பதை நீ காண்பதே
என் இதயத்தை, என் நட்பை
நீ நொறுக்கியதற்கு 
உனக்கு தண்டனையாய் இருக்கட்டும்....

Wednesday, December 28, 2011

காதல் : கடவுள்
















நானும் காதல் தெய்வீகமானது
என்று ஏற்றுக்கொள்கிறேன்
காரணம்
படைத்தல் காத்தல் அழித்தல்
ஆகிய முத்தொழில்களையும்
ஒருசேர செய்வதிந்த 
காதலை எனக்கு போதித்தவள் 
எனக்கென பிறந்த என்னவள் 


அன்றுமுதல் இன்றுவரை
நம்பிக்கையுடன் பின்பற்றுகிறேன்
காதலை, இல்லையில்லை 

காதல் என்னும் கடவுளை

பிச்சைக்காரன்













பல தெருக்களில் அலைந்து
கஷ்டப்பட்டு
தனக்கு பிச்சையாய் கிடைத்த
சிறு உணவையும் 
அருகிலிருக்கும் நாய்க்கும்
பகிர்ந்தளித்து உண்ணும்
வள்ளலாம் தன் தந்தையை
வீட்டில் வைத்து
உணவளிக்க முடியாத மகன்

தருமம் தலை காக்கும்

என்பதையரியா மூடனவன்
ஒருவேளை
எல்லா பொருள்களையும்
இவ்வாறே தானமாய்
தந்துவிடுவார் என்ற பயத்தினால் 

வீட்டிலிருந்து விரட்டியடித்தானோ??
 

இப்போதொரு சந்தேகம்
யார் பிச்சைக்காரன் ??
பொதுவுடைமை எண்ணம் கொண்ட
தந்தையா?? 
தனக்கு மட்டுமே வாழும்
சுயநலம் கொண்ட தமையனா??

எழுத்துக்கள்













ஹைக்கூ  கவிதைகளை 
விரும்பி படிப்பவன் நான்
கொஞ்சம் எழுத்துக்களில்
கொஞ்சம் வார்த்தைகளில்  
அதிகமாய் அர்த்தம் தருவாதால்  
அதில்,எனக்கொரு நாட்டம்  
என்னவளை எனக்காய் பெறும் வரை 
இக்கவிதைகளை எழுதவும் செய்தேன்   

ஆனால் இன்றோ,
என் எண்ணங்களில் நிறைந்து 
என் எழுத்துக்களில்  அவளே   
வழிந்தோடுவதால்  
என்னுடைய சிந்தனைகளும்,
என்னுடைய எழுத்துக்களும்,
அதன் கோர்வையாய் கவிதையின் 
சொற்களும் அதிகரிக்க தொடங்கிவிட்டது ...

ஒருவேளை நான் எழுதும்
ஒவ்வொரு  எழுத்துக்களும்
நான் அவள் மீது கொடிருக்கும் அன்போ ??
இரண்டே வரிகளில் எழுதியவன்
இன்றோ, இரண்டாயிரம் வரிகள்
எழுதித்தள்ளுகிறேனே...

பொழுதுபோக்காய் நான் எழுதும்
ஹைக்கூ கவிதையைக் கூட மாற்றி
காதல் கவிதை எழுதவைத்தவளே
அதன் பிரதிபலனாய் தான்
அந்தக்கவிதைகளிலும் என் கவிதையாகிய 
உன்  பெயரே அதிகமாய்  
இடம்பெறச்செய்கிறேனோ  ??

பொக்கிஷம்


 






சிலர்க்கு தேவையில்லாதவை
மற்றவர்க்கு அத்தியாவசியமாகிறது
அது போல் தான்
உனக்கு நான் தேவையில்லாதவனாய்
ஆகிவிட்டாலும், நான் உயிர் வாழ
நீ அத்தியாவசியமாகிறாய்...

ஒரு சிலர் தூக்கி எறிபவை

இன்னொருவருக்கு தேவைப்படுகிறது
என்னை தூக்கி எறிந்துவிட்டு சென்றாலும்
நீயும் உன் நினைவுகளும்
முக்கியமாய் உன் காதலும்
எனக்கு வெகுவாய் தேவைப்படுகிறது

ஒருகாலத்தில் தேவயற்றவையாய்

ஏறிந்தது,பிற்காலத்தில்
மிகவும் மதிப்பு பெறுகிறது
என்னை வேண்டாதவனாய் நீ
நினைத்தாலும், உன் நினைவுகளை
என் மனம் அன்றும்,இன்றும்,என்றும்
பொக்கிஷமாய் பாதுகாக்கின்றது

Friday, December 23, 2011

பண்டிகை நாள்













பல நாட்களாய் எதிர்நோக்கிய
பண்டிகை நாள் சண்டேயில் வருவதும்
பண்டிகை நாளன்று என்னவளுடன்
சண்டை வருவதும்
தவிர்க்கப்படவேண்டியது என்றாலும் ,
ஏதோ ஓர் வருடத்திலாவது இப்படி
மாட்டிக்கொள்கிறேன் 

சண்டேயில் வந்தால்

அடுத்த நாள்
வேலை பற்றிய நினைவுகளும்
சண்டை வந்தால்,அடுத்த சந்திப்பு
பற்றிய கவலை,பயமும்
இந்த நொடியை
சந்தோசமாய் அனுபவிக்க
முடியமால் பண்ணுகின்றது
பண்டிகையும் அரைகுறையாய்
முடிந்து போகின்றது ..

Thursday, December 22, 2011

வெள்ளைத்தாள்
















நானும் கூட
ஒரு வெள்ளைத்தாள்
போல் தான்
எனக்கென்று திசையின்றி
காற்றடிக்கும் பக்கம்
பறந்துகொண்டிருந்தேன்
எல்லாம் அவள் வரும் வரை தான்

எப்போதவள் என்னில்

காதல் கவிதை எழுதி
என்னை கனமாக்கிவிட்டளோ,
அன்று முதல் அவள்
மூச்சுக்காற்றுக்கு மட்டுமே
அசைந்தாடும் பக்கமாகிவிட்டேன்
அவளின் நாட்குறிப்பில்

நிரந்தரமாய்....

சிபாரிசு












கண்ணே
நான் சொல்லாவிட்டால்
என்ன ???
நான் உன் பெயரை மட்டுமே
கிறுக்கிக்கொண்டிருந்த
நோட்டின் எழுதாத கடைசிப்பக்க
பக்க வெள்ளைதாளும்
உன் கையில் கிடைத்தால்
ஆயிரம் கவிதைகள்  பாடி
என் காதலுக்கு
உன்னிடத்தில் சிபாரிசு செய்யும் ...
சம்மதம் சொல்வாயா ???

காத்திருக்கிறேன் ............
















என் வாழ்க்கைச்சாலையில்
அவள் ஒரு நொடி
கடந்து செல்வதற்காக
யுகம் யுகாமாய்
காத்துக்கிடக்கிறேன் ....

Sunday, December 18, 2011

சதுரங்கம்
















நானும் வாழ்க்கை சதுரங்கத்தை
ஜெய்த்துக்கொண்டிருந்த
சக்கரவர்த்தி தான்
இப்போதும் படைகள் பல
கொண்டு அரசாலும் அரசன் நான்
இருப்பினும் என் ராணியாலயே
நான் வெட்டப்படுவதால்
வீழ்ந்துகொண்டே இருக்கிறேன்
வாழ்கையில் தோற்றவனாய்

Wednesday, December 14, 2011

கொல்லும் மௌனம்












நட்பே, உனக்கு 
என்ன தான் ஆயிற்று
என் எதற்கிந்த மாற்றம்
என் மேல் என்ன கோபம்
கோபத்தை காட்ட ஆயிரம்
வழி இருக்க மௌனத்தை
எதற்கெடுத்தாய் ??
எந்த ஆயுதம் ரணப்படுத்தி
கொல்லும் என்பதை
தெளிவாய் உணர்ந்த
கொலையியல் வல்லுநர்
ஆகிவிட்டயோ ???

உன் சமீபத்திய மௌனம்
தற்காலிகமானதுதான்
ஆயினும் இந்த சிறுமாற்றமும்
எனக்குள் பல பாதிப்பை
ஏற்படுத்தும் என்று அறியாயோ???
உன் நண்பனாய் ஒரு வேளை
உன் வார்த்தைகளை
கேளாமல் போயிருப்பேன்
ஆனால் உன் மௌனத்தை
உனாரமால் இருப்பது
எனக்கும் என் நட்புக்கும்
இழுக்கல்லவா???


வார்த்தைகளை பரிமாறி
நமக்குள்
புன்கையை பூக்க உதவிய
நட்பையே உன் மௌனத்தால்
காயப்படுத்த துணிந்தாயோ???
சிலவேளைகளில்
எனக்குநானே வாய்ப்பூட்டு
போட்டு கொண்டபோது
வார்த்தைகளின் வீரியத்தை
நீ எனக்கெடுத்துரைத்தாய்
அப்போது என் மௌனத்தால்
நீ பட்ட பாடுகளை
எடுத்துரைக்கத்தான் நீ
மௌனித்திருக்கிறாயோ??
இது ஒரு விதமான
பழிவாங்குதல் என்பதை
என்று உணர்வாயோ ??


அதிகமாய் காயப்பட்ட இதயமே
ஊமையாகிப்போகும்
என்று நானுமறிவேன்
அப்படி என்ன நானோ
என் நட்போ உன்னை
காயப்படுத்திவிட்டோம் ???
இந்த மாற்றத்துக்கு உன்னிடம்
ஆயிரம் காரணமிருக்கலாம்
அதை காட்டிலும் அதற்கு
தீர்வுகள் அதிகமிருக்கிறது
என்ற உண்மையை
அறியமறுக்க உன் மௌனமே
தடைக் கல்லென உணராயோ


நீயே இதை ஏற்கத்தயாராக
இல்லாவிடினும் சரி
உன் புன்னகையில் மட்டும்
பங்குகொள்ளும் பல
நண்பர்கள் உனக்கிருக்கலாம்
உன் சோகங்களிலும் கஷ்டங்களிலும்
உன் அருகில் இருக்க
விரும்பும் உண்மையான
உண்மையான நண்பன் நான் ...
அதனால் தான் நீ சிறு விஷயம்
என்று நினைக்கும் உன் மௌனத்திற்காக
இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறேன்
என்பதை ஒப்புக்கொள்வாயோ???


நான் பேச மறுத்தால் உனக்கென
என நீ கேட்பது தெளிவாய் கேட்கிறது
உனக்கு என்ன நின்று விடப்போகிறது
என்றும் கூட கேட்பாய்
நீ மட்டும் அல்ல என் நட்புவட்டத்துள்
காயப்படுத்தும் எதையும் நான்
எதிர்க்கத்தான் செய்வேன்
தவறினால் அது
சுற்றிக்கொண்டிருக்கும் என் உலகையே
அசையாமல் நிறுத்திப்போடுகின்றது
 விட்டுக்கொடுத்து
போவதுதானே நட்பு
எனக்காய் உன் சோகங்களை
கோபங்களை
மறந்து உன் மௌனத்தை
விட்டுத்தரமாட்டயோ ???

நீ கோபத்தை விடமறுத்தால்
இந்த வீண் மௌனம் தொடரும்
நம் நட்பும் சிதறும்
அது உன் தவறினை நீ
உணர்ந்தால்,நம் மகிழ்ச்சியாய்
பேசிக்கொண்ட காலங்கள்
திரும்பும்,எந்த துன்பம்
வரினும் என் நட்பு
தேடிவந்து உதவும் ...

மறுபடியும் கேட்கிறேன்
எனக்காக உன் மௌனத்தை
தூக்கியெரி ...

தும்மல்


 















அன்றைக்கு ஏனோ
அத்தனை தும்மல்கள்
வந்து என்னை தடுமாற
வைத்துவிட்டது
நண்பன் நக்கலாய் கேட்டான்
"யார் அவள் நாள்
முழுவதும் உன்னை
நினைத்துக்கொண்டிருப்பது?"
என்று கேட்ட மாத்திரத்தில்
உன் ஞாபகம் ஒரு நொடி என்
நினைவில் வந்து சென்றது


இருப்பினும்
இது முட்டாள் தனமான
நம்பிக்கை என்று
எண்ணிக்கொண்டு
என் வேலைகளை தொடர்ந்தேன்
பிறகொரு நாள்
மனிதஉடல் சார்ந்த புத்தகம்
படித்த போதுதான் அறிந்துகொண்டேன்
ஒவ்வொரு முறை தும்மும் போதும்
இதயம் ஒரு முறை நின்று
துடிக்கிறதாமே


என் நண்பன் சொன்னது
நினைவுக்கு வந்தது
என் இதயத்தை இயக்கவைப்பதும்
நிருத்திவைப்பதும் அவள்
செய்கையாலன்றி  யாரால் கூடும்


இன்னொன்றும் தோன்றியது
தும்மல் ஆயுளோடு
சம்பந்தப்படிருப்பதால் தான்
தும்மலின் போதெல்லாம்
"நூறு ஆயுசு"  என்கின்றோம்
ஒரு வேளை பூமியுள்ளவரை 

நான் வாழ எனக்காய்
என்னை நினைத்துக்கொண்டே
இருக்கிறாளோ ??

என்னவள்...

இமைகள்

  










இரு தண்டவாளத்தின்
இடையே அழகாய்
பயணிக்கும்
தொடர்வண்டியாய்
இரு இமைகளுக்குள்ளேயே
பயணிக்கும் அவள் கருவிழிப்
பார்வையின் சேருமிடம்
நானாக இருக்க வேண்டுகிறேன்


ஐயோ  மறந்தே விட்டேன்
எந்த தண்டவளாமும்
இணைவதில்லையே பின்
எப்படி நாணத்தால்
அவள் கண்சிமிட்டும்போது
மட்டும் அவள் இமைகள்
பிரிந்து பின்பு சேர்கின்றது  


ஒருவேளை
எதோ ஒரு சூலில் நீங்கள்
இருவரும் பிரியநேரிட்டாலும்
பின்பு எப்படியும்
சேர்ந்துவிடுவீர்கள் என்று 

எங்களுக்கு
நம்பிக்கைதரத்தான் இந்த
செயல் நடைபெறுகிறதோ ? 

Tuesday, December 13, 2011

சொல்லாத வார்த்தைகள்














ஆம், என் மீது தான்
தவறென்று
ஒத்துக்கொள்கிறேன்

நான் அன்று

அவளை தூரத்தில்
நின்று ரசித்த நிமிடத்தில்
புன்கையை அருகில்
கண்ட நொடியில்
அல்லது ஏதோ ஒரு
தருணத்திலாவது
"அவள் அவளை மட்டுமே
எனக்கு பிடிக்கும்" என்று
மற்றவர்களிடம்
ஆயிரம் முறை சொன்னதை
அவளிடம் ஒரு முறை,
ஒரே முறையாவது 

சொல்லியிருக்கலாம்

சொல்ல தவறியதால்
தான்
தேர்வே எழுதா
மாணவன் நல்ல முடிவுக்காய்
காத்திருப்பது  போல
நான் காத்திருந்திருக்கிறேன்


என் காத்திருத்தலுக்கு
சாதகமான
விடையே கிடைக்கவில்லை
இனி கிடைக்கபோவதுமில்லை
காத்திருத்தலின் கொடுமை அன்றே
புரிந்துவிட்டது  எனக்கு


என் வாழ்கை
முழுவதும் அவள் நட்பாவது
தொடரவேண்டுமென்று  நினைத்தவன்
என் வாழ்கையே அவள் காதல்
தானென்று மறந்ததால்
இன்றவள் நட்பையும் கூட
இழந்து தவிக்கிறேன் 


ஒருவேளை அன்றே என் 
விருப்பத்தை சொல்லி
அவள் மறுத்திருந்தாலும் கூட
அவள் நினைவுகளுடன்
வாழ்ந்திருப்பேன், இப்போதும் கூட
பெரியமாற்றமின்றி அதைத்தானே
செய்துகொண்டிருக்கிறேன் ??

 
இப்போது அவள் எனதில்லை
என்பது உறுதியும் ஆகிவிட்டது
இனி சொல்லாத காதலை
நினைத்தென்ன பயன் ??


கண்கெட்டவர்களுக்கு சூரிய
நமஸ்காரம் ஏன் என்பார்கள்
அவர்கள் சூரியனை
காணாவிடினும் அதன்
வெப்பத்தை உணர்வார்களே
அதுபோல்தான்
அவள் எனதில்லை என்றபோதும்
அழகிய அவள் நினைவுகள்
எப்போதும் என்னுடையதுதான்
அதுனடனே என்
காலத்தை கடத்தப்போகிறேன்

மாற்றம்













மாற்றம் ஒன்று தான்
உலகில் மாறாததாம்
ஒத்துக்கொண்டேன்
உன்னை சந்தித்த போது
எனக்குள் ஏற்பட்ட
மாற்றங்களை கண்டு


அப்போது உணரவில்லை
நான் எமாற்றப்பட்டு
கொண்டிருக்கிறேன் என்று


இப்போததை
உணரும் போது நீ
எனக்குள் ஏற்படுத்திய
மாற்றங்களில் இருந்து
விடுபட முடியவில்லை
காரணம் நீ என்னை
ஏமாற்றி சென்றாய் என்பதை
என் மனம் இன்னமும் கூட
ஏற்கவும் இல்லை


என்னாலயே என்னை
புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை
என்றால் இனி யாரால் கூடும்
இதே நிலைமை தான் என்
மரணம்வரை எனவும்
எண்ணத் தோன்றுகிறது

எனக்கு மட்டும் என் 

மாற்றங்கள் மாறவில்லையே 
அது ஏன் ??
இப்போது மாற்றத்தின் நியதி
என்னானது??
எனக்கு மட்டும் அது
பொய்த்துப்போனதோ ??

காலம் பதில் சொல்லட்டும் .

Thursday, December 8, 2011

பொறாமை













நானும் ஒரு கவிஞனாய் 
கவிதைகளின் வார்த்தைகளை
புரிந்துகொள்கிறேன் ...
என் கவிதைகள் என்னவள் மேல் 
பொறாமை கொண்டு இருக்கின்றது...


இருக்கத்தானே செய்யும்
நான் எழுதிய கவிதைகள்
அருகிலிருக்க அழகிய
புதுகவிதையாம்
என்னவளை நான் ரசித்துக்
கொண்டிருந்தால்.. 

அவற்றை  சமாளிக்க
"மனதில் அவள் வந்ததால் தான்
எழுத்தில் நீங்க வந்தீர்கள்" என்றேன்
சமாதனம் அடையவில்லை 


படைத்தவன் தலையிலயே
கை வைப்பது இதுதானோ ??
என்று நொந்து கொண்டேன் என்னை 


என்னவளை எனக்கு பெற்று தந்தது
என் கவிதைகள்,
என் கவிதைகளோ அவளை பற்றியது
இதில் எதற்கு முக்கியத்துவம் தருவது ??


இறுதியாய் கேட்டது
நானா?? அவளா ?? 

என்ற கவிதைகளிடம் 

எனக்கு தெரியவில்லை
நான் உங்களை படிக்கும் போது
என் காதலியை மறக்கின்றேன்
என் காதலியை பார்க்கும் போதுதான் 

உங்களை படைக்கின்றேன் 
 

இருப்பினும்
என்னவள் அருகே இருப்பின்
உங்களைப்போல்  ஆயிரம்
 
கவிதைகள் படைப்பேன்
அனால் என் ஆயிரம்
கவிதைகள்
சேர்ந்தாலும் அவளைப்பெற்று
தரமுடியாதென்றேன்


இப்போதுதான்
என் தரப்பு உண்மைகளையும்
புரிந்துகொண்டு
என்னைக்காட்டிலும்
என்னவளை
அதிகமாய், அழகாய் வர்ணிக்கிறது
என் கவிதைகள் 
...
அதை சேர்ந்தே ரசிக்கின்றோம்  
நானும் என்னவளும்  

Monday, December 5, 2011

பயணம்













காதலும் ஒரு வித
பயணம் தான்
பொதுவாய் பயணத்தில்
சேருமிடம் தூரமாய்
தோன்றும்
எனக்கும் அப்படித்தான் 
என் பயணத்தில் 
அவளை காணும் வரை
வாழ்க்கை மிகவும்
தூரமாய் தோன்றியது
கண்டபின்தான் ,
வாழ்க்கையின் சுவாரஸ்யமே
புரிகிறது....

என் வாழ்க்கை
பயணத்தில்
அவளை தேடியதின்
நோக்கம்,
அவள்
, அவளால்
மட்டும் தான்
என்னை
இந்த உலகத்தின்   

துன்பங்களை
மறக்கச்செய்து

என் தாயின்
கருவறையில்  நான்
பெற்ற அமைதியை
திரும்பப்பெற
வழி காட்ட முடிகிறது 

Sunday, December 4, 2011

ஒரு நிமிடம்










 





இந்த உலகில் ஒரு நிமிடத்தில்
250 குழந்தைகள் பிறக்கின்றனவாம்
உலகம் சூரியனை ஒருதடவை 
சுற்றிவருகிறதாம்
எத்தனையோ  பொருட்கள்
உற்பத்தி ஆகின்றனவாம்
இதுபோல் பல
அனால்  இதைக்காட்டிலும்
உன்னைக்கண்ட 
அந்த ஒரு நிமிடம் தான் 
எனக்கு
ஆச்சரியம் அளிக்கின்றது 


அது தான் 
எனக்கு தெரியாமலே 
எனக்குள் எத்தனை
மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது  ???
என் வாழ்க்கையிலும் தான் ....

கடவுளின் கவலை















மனிதா
என் சாயலிலே
உன்னை படைத்தேன்
பதிலுக்கு நீ
தினம் ஒரு உருவத்தில்
எனை  
படைத்துக்கொண்டிருக்கிறாய் ...


எல்லோர்க்கும் பொதுவாய்
மனிதன் என்று பெயரிட்டேன்
ஆனால் நீயோ வெவ்வேறு
பெயரில் எனை அழைக்கின்றாய்...
எல்லாப் பெயரும் எனை குறித்தாலும்
நீ வைத்தது தான் சிறந்ததென்கின்றாய்...


என் வழியில் நீ
நடந்த காலம் போய்
உன் வழியில் எனை இழுக்கின்றாய் ...
உன் விதியை எழுதிட்ட
எனக்கே நான் பின்பற்ற
விதிசெய்கிறாய்...


எத்தனை பேர் வந்தாலும் அதில்
உன்னையும்
உன் ஆதி முதல் அந்தம் வரை
நானறிவேன் அனால்
உண்கண்முனே நான் வரினும் எனை
நீ அறிவாயோ??
நீ நம்புவாயோ??
மாயவித்தை செய்து நிரூபிக்க
நான் என்ன மாயாவியோ ??


குற்றங்கள் நீ செய்து
எல்லாம் அவன் செயல்
என்னை குற்றப்படுத்துகிறாய்
பாவங்களை செய்துவிட்டு
அதன் விமோசனங்களை
என்னை கேட்கின்றாய்  


துன்பம் வரும் போது மட்டும்
நீ எனை நினைக்க
சந்தோசமாய் இருக்கும் போது
மட்டும் நான் உனக்கு
உதவட்டுமா?? 


நல்லவேளை  என்னிடம் உன்னை
படைத்தற்கு காப்புரிமை 
இல்லாததை பயன்படுத்தி
உன் படைத்தல் தொழிலை
ஆரம்பிக்காமல் இருக்கிறாய் ...


நன்றி என்பது
நாய்க்கு மட்டும்தானென்று
நினைத்து விட்டாய் போலும்
நான் படைத்த எல்லா
ஜீவன்களிலும் நீ
கற்றுக்கொள்ள வேண்டிய
விஷயங்கள் பல இருக்க,
உன்னை படைத்தது தான்
நான் செய்த
மிகப்பெரிய தவறென்று
கற்றுகொண்டேன் உன்னிடம் 


இப்போது எனக்கும் கூட
கடவுள் இல்லை என்போருடன்
சேர்ந்து விட தோன்றுகிறது
காரணம் அவர்களாவது
"கடவுள் ஒருவேளை இருந்தால்"
என்ற பயத்துடன்
மனிதனாய் நடந்து கொள்கிறார்கள்

கண்கள்











காதலியே ...
உன் கண்கள்
உன்னோடுனே இருப்பதால்
அது செய்யும் காரியங்களை
நீ கவனிக்காமல் விட்டிருக்கலாம் ..


சில நாட்கள் மற்றும்
அவற்றை எனக்கு இரவல் கொடு
நான் உனக்கு  நிரூபிக்கிறேன்
அது செய்யும் குற்றங்களை ...


முதலில் பார்வையை
வழிப்பறி செய்யத்துவங்கி
பின்பு என் கண்களை ஈர்த்து,
கொள்ளையடிக்க  முயன்றது
இப்போதோ என் மனதை
கிழித்து கொல்லவும் 

துணிந்து விட்டது 

தயவு செய்து
நிறுத்தச்சொல் அதன்
அட்டூழியங்களை ...

முடிந்தால்
உண்கண்களை
உன் இமை கொண்டு மூடி
வீட்டுக்காவலில் வை ...
தவறினால்
திட்டமிட்ட
கொள்ளை, கொலை
போன்ற பலவழக்குகளில்
நீ கைது செய்யப்படுவாய்... 

என்பதை மட்டும்
தெளிவாய் புரிந்துகொள்

Saturday, December 3, 2011

என் கவிதை











நான் ஒன்றும்
பிறவிக்கலைஞன் இல்லை
பரம்பரைக்கவிஞன் இல்லை 
ஆயினும் 
எதை பற்றியும் யோசிக்காமல்
கைக்கு வந்ததை
கிறுக்கிக்கொண்டிருக்காமல்
எனக்கு சரியெனப்பட்டதை தான்
எழுதிக்கொண்டு இருக்கிறேன்..
இது ரசிக்கும்படி இல்லாமல் போகலாம்
கண்டிப்பாய்
வெறுக்கும் படி இருக்காது

காரணம்
நான் ஒவ்வொரு முறை
எழுதும் போதும் 
என்னக்குள்ளும் ஒருகுரல்
எச்சரித்துக்கொண்டே இருக்கிறது
முடிவில் ஆச்சரியக்குறியிட்டு
எழுதவதெல்லாம் கவிதையாகாது
தொடக்கத்திலிருந்து  ஆச்சரியப்படும்படி
எழுதுவதே "கவிதை" என்று...

என் எழுத்துக்கள்
அதை செய்யும்
என்பதால் 


நான் எழுதுவதும்
கவிதை தான்
என்று நம்புகிறேன் ...

அவள் சுவாசம்











 




அவள் சுவாசம்
தரும் வாசம்
என் மீது தென்றலாய்
நேசம் கொண்டு வீசும் ...
அவள் நேசம் கொண்டு 
பேசிடும்போதோ
ஆனந்தத்தில் 
என் மூச்சும்
நின்று போகும் ...

நிம்மதி
















"நிம்மதி"
என் வாழ்க்கைக்கான
மிகப்பெரிய தேடல்
நான் அடைய வேண்டிய
குறிக்கோள்
அதை அடைவதற்கான
பயணத்தில் தான்
எத்தனை தடைகள் ??
எத்தனை எதிர்ப்புக்கள் ??
எவ்வளவு சிக்கல்கள் ??
எவ்வளவு வருத்தங்கள் ??

புன்னகையை இழந்தே
தேடலை தொடங்கினேன்
அது ஏனோ, என் இலக்கு
நீண்டுகொண்டே போகிறது
என் துன்பங்கள் சுமையாகிறது
என்னிடத்தில் நேரம் கூட
மிகக்குறைவாய் இருக்கிறது
மனமும் சோர்ந்து போகிறது 

என்ன வந்தால் என்ன
எல்லாவற்றையும் மீறி
அடைந்துவிடுவேன் 
நம்பிக்கையுடன்
நான் சேருமிடத்தை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறேன்
நத்தயைப்போல் ...

என் இலக்கை அடைந்து
வெற்றியுடன்
திரும்பினாலே அது
என் உலக சாதனை
தவறினால் அது என்
உயிர் போகும் வேதனை