சுல்எறும்புக்கும் சுறுசுறுப்பின்
சூட்சமத்தை கற்றுத்தந்தவன் நீ ...
உன் உழைப்பைக்கண்டே
சுட்டெரிக்கும் சூரியனும்
கணக்கிடும் நேரத்தை ...
இயற்கைக்கும் இது தெரிந்தது போலும்
தன் வேலைக்கும் உன்னை
அவசரமாய் அழைத்துச்சென்றதோ ???
வீழ்ந்து விட்டோமென்று கரைபவன் நீயல்ல
என பலமுறை நிரூபித்திருக்கிறாயே!!!
அடிபட்ட களிறல்ல நீ
புரவி போல் திரும்பவும் எழுவாய்
புயலென வானில் பறப்பாய்
செயற்கையோ!!!இயற்கையோ!!!
யாரால் அழிக்கக்கூடும்
எம் ஜப்பானிய சகோதரனின்
தன்னபிக்கையும், விடாமுயற்சியும்
No comments:
Post a Comment