Saturday, April 30, 2011

ஆறாம் விரல்

புண்பட்ட நெஞ்சை
புகையை விட்டு ஆற்றும்
நண்பர்களுக்கு















இந்நாளில்
அதிகமாய்  புகைப்பவனின் சிதையே

அதிகமாய்  எரிகிறதாம்
இடுகாட்டில்!!!

Thursday, April 21, 2011

வேர்கள்

 
அவள் மதம் வேறு,
அவள் இனம் வேறு,
அவள் குளம் வேறு,
அவள் நிறம் வேறு,
அவள் மொழி வேறு,
இத்தனை "வேறு"கள் இருந்தும்
என் இதயத்தில் வேரூன்றி
காதலாய் பூத்துவிட்டாள் .....

Wednesday, April 13, 2011

கனவிலும் என்னவள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
தூங்கிக்கொண்டே இருப்பதால்
"சோம்பேறி" என்ற பெயரும் வங்கியாகிவிட்டது

யாருக்கு புரிகிறது ???
நான் தூங்குவதே

என்னவளை
கனவில் சந்திக்கத்தான்
என்று

காலடிச்சுவடுகள்









 
 
 
 
 
 
 
சாதனையாளன் தான்
கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தான்
தன்னை
தொடர்ந்து வந்த காரிகையும் கண்டான்
அவள் இரு காலடி சுவடைக்காட்டி
பெருமையுடன் சொன்னாள்
ஒவ்வொரு காதலனின் வெற்றிக்கு பின்னும்
அவன் காதலி இருப்பதாய்!!!
அவன் சிரித்தவாரே சொன்னான்
நீ சொல்வதும் சரிதான்
இப்பாதச்சுவடில் ஒன்று உன்னுடையதுதான்
ஆனால் மற்றொன்று என்னுடையதல்ல
என்னை சுமந்து சென்ற என் நண்பனுடையது ....

ஜப்பான் சுனாமி 2011

 
 
 
 
 
 
 
 
 
 
சுல்எறும்புக்கும் சுறுசுறுப்பின்
சூட்சமத்தை கற்றுத்தந்தவன் நீ ...
உன் உழைப்பைக்கண்டே
சுட்டெரிக்கும் சூரியனும்
கணக்கிடும் நேரத்தை ...
இயற்கைக்கும் இது தெரிந்தது போலும்
தன் வேலைக்கும் உன்னை
அவசரமாய் அழைத்துச்சென்றதோ ???
வீழ்ந்து விட்டோமென்று கரைபவன் நீயல்ல
என பலமுறை நிரூபித்திருக்கிறாயே!!!
அடிபட்ட களிறல்ல நீ
புரவி போல் திரும்பவும் எழுவாய்
புயலென வானில் பறப்பாய்
செயற்கையோ!!!இயற்கையோ!!!
யாரால் அழிக்கக்கூடும்
எம்  ஜப்பானிய சகோதரனின்
தன்னபிக்கையும், விடாமுயற்சியும்

நட்பா??? காதலா ???

எது சிறந்தது ???
வெற்றிக்கு பின் கை குடுக்கும் காதலா ???

வெற்றி பெற தோல் கொடுக்கும் நட்பா???
நிச்சயமாய் நட்பென்பேன் நான்
பலவேளைகளில்
காதலை பெற்றுத்தருவதே
நட்பு மட்டும்
தான்
 


Tuesday, April 5, 2011

தலைஎழுத்து


"காதலித்துப்பார் கையெழுத்து அழகாகும்"
கவிஞர் சொல்லிமுடிப்பதற்கு முன்பு
கேட்டேவிட்டேன்
"அப்போ தலைஎழுத்து??? "

Monday, April 4, 2011

புதுக்கவிதை...












புதுக்கவிதை சிலவேளைகளில் 
அதை எழுதியவனுக்கே 
புரிவதில்லையாம்...
என்னவளும் புதுக்கவிதானோ???
அவளை படைத்த கடவுளாலும் ஏனோ

என்னவளை
புரிந்துகொள்ள முடியவில்லையே ....