நீ கண்திறந்திருக்கும் போது
பிரகாசிக்கும்
உன் கருவிழியின் வெளிச்சம்
கூட எந்த நாளும் அந்த வெள்ளி
நிலவொளியில் இருப்பதில்லை
உன் பார்வையின் ஒளி
போல் வேறெங்கும்
கண்டதுமில்லை,
எனவே உன் சுடர் விழி
சிறிதேனும் மூடாமல் என்னை
பார்த்துக்கொண்டே இரு,
என் வழியும், வாழ்வும்
அது இரவிலோ, பகலிலோ
எப்போதுமே உன் கண்களின்
வெளிச்சதிலயே வெற்றி நடை
போடட்டும்
இதுவரை உலகில்
தான் யார் கண்ணுக்கும்
தெரியாமல் இருந்ததற்கு
இருப்பதற்கு, முதல் முதலாய்
கடவுளும் வருத்தப்படுகிறார்
நீ புகைப்படம் எடுக்க
புகைப்பட கருவியுடன்
நிற்கும் போது...
இனம் இனத்தோடு தான்
சேர்ந்திருக்கும் என்கிறார்களே
பின்பு நீ மட்டும் ஏன் பூக்கள்
இருக்குமிடமாம் பூந்தோட்டதில்
வசிப்பதேயில்லை
நீ பூக்களின் ராணி என்பதால்
நீ அவைகளுடன் இருக்கலாகாது
என்று தங்களிடம் இருந்து விலக்கி
வைத்திருக்கிறதோ அந்த
தாழ்வு மனப்பான்மை
கொண்ட பூக்கள்
அவைகளுக்கு தெரியாது போலும்
அவைகள் தங்கள் மணத்தால்
பூந்தோட்டத்தை அழகு செய்கிறது
ஆனால் நீயோ உன் அழகிய
மனதால் பூந்தோட்டத்தையே
உன்னை சுற்றி உருவாகுகின்றாய்
அவற்றின் மணம் மாறும்
உனது மனமோ, மாற்றமே கூட
மாறினாலும் என்னாளுமே மாறாது
இதனால் தானோ
காலையில் பூத்து மாலையில் வாடும்
இந்த அற்ப பூக்களுக்கு என்றுமே
வாடாத புன்னகை பூவாம் உன்னை
ராணி ஆக்கினான் இறைவன்??
நீ அந்த பூக்களின் பூந்தோட்டதில்
சேராமல் எந்நாளும் விலகியே இரு
காரணம் இருக்கிறது
உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி
பருந்தாகாது என்பதாய் நீ
அவைகளுடன் சேர்ந்தாலும் உன்
பண்புகள் அவற்றிற்கு வரப்போவதும்
இல்லை.அவற்றால் உன் நல்ல மணமோ
குணமோ எந்நாளும் மாறுவதுமில்லை
அவைகளின் ராணியாம்
உன் போல் வாழ்ந்திட வழியில்லையே
என புலம்பி கடைசிவரை உன் புகழ்
பாடியே தன் வாழ்நாளை எல்லாம்
கழித்திடட்டும்
இப்படி அடிக்கடி அழகாய்
உன் மின்னல் கண்களை
சிமிட்டி என்
பார்வையை பறிக்காதேயடி
வானத்து மின்னலுக்கும்
தப்பிய என் கண் பார்வை ஓர்
வண்ணத்து பூச்சியின கண்
சிமிட்டலால் பரிபோகலாமோ
இந்த உலகின்
அழகையெல்லாம் ரசிக்க
ஆண்டவன் எனக்காய் தந்தது
இவ்விரு கண்கள் மட்டும் தானே
அந்த கண்களையுமே உன்னிடம்
இழந்துவிட்டு என் உலகமாம்
உன் அழகை எப்படித்தான்
காண்பேனடி??
இந்த உலகின் ஒரே அழகியாம்
உன்னை காணவும்
ஒரு கவிஞனாய் அதை என்
கவிதையில் சொல்லவும்
பார்வை வேண்டுமடி எனக்கு
எனக்கே எனக்காய் மட்டும்
என் கண்களை, அது ரசிக்கும்
என்னவளின் அழகை காண
என்னிடத்திலேயே விட்டுவிடு