சந்தேகமாய் இருக்கிறது
பூமியில் பிறந்த முதல் மனிதனை
என் அளவுக்கு தனிமை
தாக்கியிருக்குமா என்று
தெரியவில்லை, ஒருவேளை
உயிர்களே இல்லாத
இடத்தில் மாட்டிக்கொண்டு
இருக்கிறேனோ ?
இப்போதைக்கு எனக்கு
மனிதன் கூட தேவையில்லை
எதோ உயிரின் ஸ்பரிசமோ, நிழலோ
கூட போதுமானது
கடவுள் பூமிக்காய் படைத்திட்ட
எல்லா தனிமையும் எனக்காய்
தந்துவிட்டரோ?? அவருடயுதும் சேர்த்து ??
No comments:
Post a Comment