இருபத்தியாறு வருடங்களாய்
இருளில் மட்டுமே
வெறுமையுடன் பயணிக்கிறது
என் வாழ்வோட்டம்
ஆறுதலாய் ஆங்காங்கே
சிறு வெளிச்சமாய்
சில மின்மினி பூச்சிகள்
என் நண்பர்கள்
இப்போது அந்த ஒளியும்
மங்கிக்கொண்டிருக்கிறது
இருளில் தொடர்ந்து
பயணிக்கிறேன் ...
தாலாட்டு சிறு வயதில்
மட்டும் தானா ??
சிறு குழந்தைக்கு
மட்டும் தானா ??
யார் சொன்னது இப்படி??
எனக்கோ என் தாயின்
வார்த்தைகள் எல்லாமே
தாலாட்டு தான் எப்போதும்
அதனால் தானோ என்னமோ
அதிகாலையில் அவள் எழுப்பும்
சத்ததிற்கும் கூட
தூங்கிக்கொண்டிருக்கிறேன்
என்னையும், உலகையும் மறந்து
நண்பா!!
ஒரு வேளை நீயும் வேண்டுமென்றே
காலைக்கதிரவனை காண்பதை
புறக்கணிப்பாயேயானால்
உன்னையும் அதற்கு
திட்டுவார்களேயானால்
பெருமையாக சொல்லிவிடு
உன் தாய் தாலாட்டின்
மகிமையை
கவிதை கண்களால் கண்டு
பாராளும் வேந்தன் நான்
என்னை நேசிப்பவரை வாழ்த்தவும்
சோதிப்பவரை வீழ்த்தவும்
ஆயுதங்கள் தேவைப்படுவதில்லை
எமக்கு, எதற்கும் பயமறியா
எம் எழுத்துக்களே போதுமானது
எம் துக்கமோ, இன்பமோ, துன்பமோ
கோபமோ, வருத்தமோ முகம் மறைக்கும்,
அதன் காரணியை என் எழுத்தோ
துணிச்சலாய் எடுத்துரைக்கும்
அதுவே தேவைப்படும் போது
அவற்றின் வீரியம் தெரியா வீணனுக்கு
புரியவைக்கும் எழுத்துக்களின்
வலிமையை !!!
என்னிடமே வைத்துக்கொள்ள
தான் ஆசைப்பட்டேன்
"நான் உன்னை விட்டுச்செல்கிறேன்
தேடாதே, தேடினாலும்
கிடைக்கமாட்டேன்"
எழுதி வைத்துவிட்டு
தொலைந்து போனது
என் நிம்மதி..
தனிமை எனக்கு
ஓவியம் வரைய, கவிதை எழுத
என் எண்ணங்களையும்
திறமையும் வளர்த்து
வாழ்கையே இதுதான் என
கற்று தந்தது
வாழ்கையில் என் நண்பர்கள்
எனக்கு தனிமையை
கற்று தந்தனர்
ஈக்கு மட்டும்மல்ல
தேன் பூச்சிக்கும் கூட
உன் மேல் காதல் வந்து
மலரெது, மலரின் மகளெது
என அறியாமல் விழி பிதுங்கி
இனி ராணி தேனீ க்காய்
அல்லாமல் உனக்கு மட்டுமாய்
தேன் சேர்க்கும்..
சந்தேகமாய் இருக்கிறது
பூமியில் பிறந்த முதல் மனிதனை
என் அளவுக்கு தனிமை
தாக்கியிருக்குமா என்று
தெரியவில்லை, ஒருவேளை
உயிர்களே இல்லாத
இடத்தில் மாட்டிக்கொண்டு
இருக்கிறேனோ ?
இப்போதைக்கு எனக்கு
மனிதன் கூட தேவையில்லை
எதோ உயிரின் ஸ்பரிசமோ, நிழலோ
கூட போதுமானது
கடவுள் பூமிக்காய் படைத்திட்ட
எல்லா தனிமையும் எனக்காய்
தந்துவிட்டரோ?? அவருடயுதும் சேர்த்து ??
நிலவே !!!
தனிமையில் தவிக்கிறேன்
இப்போது தான் உணர்கிறேன்
உன் நிலையை
நீயோ
பல கோடி வான் நட்சத்திரங்கள்
உன் அருகிலிருந்தும்
உற்ற துணைக்காய் வருந்தி
தினமும் தேய்கிறாய்
நானோ
என்னை சுற்றி பல உறவுகள்
இருந்தும் நல்ல நட்புக்காய்
ஏங்கி உயிருடன் மாய்கிறேன்
இந்த உலக வட்டத்தை
என் நட்பு வட்டம் பெரிது தான்
இருப்பினும் தனிமையில்
தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்
தோல்வியில் துவளும் போதும்
துன்பத்தில் அழுகும் போதும்
ஆதராவாய் தோள்கொடுக்கும்
உண்மையான தோழமையை
நான் தேடுகிறபோது தான்
என் நட்பு வட்டமும் நீள்கிறது
என் தேடலும் அதிகரிக்கிறது......
எனக்கு
இந்நாளில் மழை மேல்
கொண்ட ஆர்வமும்
நீங்கிப்போனது
அதுவும் எனக்கு தனிமை
மட்டுமே தந்து விட்டு போனதால்
என் காதலை போலவே
என் கவிதைகள் சிலவும்
எனக்குள்ளேயே தோன்றி
எனக்குள்ளேயே புதைந்தும்
போகின்றது
காதலும், கவிதைகளும்
புதைந்ததனால் என் மனமும்
பூக்களே பூக்காத
கல்லறை தோட்டமாகிவிட்டது
இனிமேலும் இங்கு உயிரோட்டம்
இருக்கப்போவதில்ல...
அதை எதிர்ப்பாகவும்
எனக்கென்று யாருமில்லை