Friday, February 17, 2012

பம்பரம்















நீ தானே என்னை
ஆட்டுவிக்கிறாய் என்று
ஆணவம் கொள்ளாதே
உன்னால் தான்
என் வாழ்வே என்றும்
எண்ணிக்கொள்ளதே

உண்மையை புரிந்துகொள்

நான் உன்னை விட்டு
பிரிந்த பிறகே, நீ என்னை
கைவிட்ட பிறகே
நான் இன்னும் அழகாய்
இயல்பாய் இயங்குகிறேன்

இப்படிக்கு பம்பரம்

பறவையின் பாட்டு
















வானில் சுதந்திரமாய்
சுற்றித்திரியும் சிறுபறவை நான்
எனக்கென்று தனி லட்சியமோ
தனிக் கொள்கைகளோ ஏதுமின்றி
தக்கனபிழைத்துவாழ்தல்
விதிப்படி வாழ்பவன் நான் 
நாளைக்காய் எதையும்
சேர்த்து வைக்க அவசியம்
இல்லாததால், அதை செய்யாமல்
இன்றைய நாளில் சந்தோசமாய்
கிடைத்த வாழ்வை அனுபவிப்பவன் நான் 


அன்றைய நாளின் தேடலை
முகவரியே தந்திராத நண்பனின்
வீட்டில் துவங்கினேன்
நண்பன் குடுத்த சிறு உணவு
அன்று என் அமிர்தமானது
அவன் கைகளிலையே அமர்ந்து
சாப்பிடும் அளவுக்கு நம்பிக்க கொடுத்தது
எனக்கு தோள் கொடுக்கும்
தோழனும் ஆனான்
எங்கள் நட்பும் பெரிதானது


நட்பென்னும் பூ அழகாய்
அங்கு பூத்திட அதை
ரசிக்க மறந்து
அதை கசக்கி எரிந்திட
அவனுக்குள் எங்கிருந்து
அப்படி ஓர் எண்ணம் வந்ததோ
இன்னமும் என் சிறு  இதயம்
அவன் செய்ததை
ஒப்புக்கொள்ள மறுக்கிறது
அந்த நினைவுகளை  மறக்க மறுக்கிறது  

ஆம்
என்னை அவன் கூண்டிலிட்டான்
நான் என்ன தவறு செய்தேன்
அந்த சிறையில் வாடிட
நண்பனை நம்பியதோர் பாவமா??
இந்நாளில் நண்பரென்று
நம்பிக்கை வைப்பது தான்
மிகப்பெரிய பாவம் என்று
உணர்ந்து கலங்கித்தான் போனேன்


நண்பா!!!
உனக்கு என் இப்படி ஓர் எண்ணம்
என்னைக் கூண்டிலிட எப்படி
மனம் வந்தது உனக்கும் ??
வாய் பேசமாட்டேனென்று நீ
என்ன வேண்டுமானாலும் செய்வாயோ ??
செல்லமாய் உன்னிடம் வந்தவனை
கூண்டில் அடைத்துவிட்டு
என்னை உன் செல்லப்பறவை என்றாய்...
நானே தேடி உண்ணும் உணவை
காட்டிலுமா இப்போது நீ தரும்
உணவு இனித்திடும்???
நீ தங்கக்கூண்டே செய்யினும்
அது என் சிறை தானே ???
நான் என்னைக் காப்பாற்ற
கூச்சலிடுவது உனக்கு
ஆனந்தமாய், இன்னிசையாய்
தெரிகின்றது

இவை எல்லாம்
உன் தண்டனயைக்காட்டிலும்
கொடுமையாய் உள்ளது 

இது தானோ உன் நட்பு 
நம்பிக்கையின்றி
தனிமைச் சிறையில்
உணவின்றி தவிப்பதும்
அதை நீ சிரித்துக்கொண்டே
ரசிப்பதும் ???

 நீ குடுக்கும் சிறு தானியத்துக்கு என்
சுதந்திரத்தை உன்னிடம் விட்டுக்
கொடுப்பேன் விற்றுவிடுவேன்
என்று எப்படி நீ  எண்ணலாம் ??
வலியவன் எளியவனை அடக்கி
ஆள்வதே உலக நியதி ஆகிவிட்டது

எங்கேயும் காலம் என்பது மாறும்,
இதோ இன்று எனக்கும் தான்
உன் சிறையை விட்டு பறந்து விட
வாய்த்தது
  ஓர் சந்தர்ப்பம்
உன் நட்பின் பரிசாய் நீ அளித்த
கூண்டையும் சேர்த்து
தூக்கிகொண்டு பறக்க எண்ணினேன்
உன் உணவை உண்ணாததால்
நானே இப்போது திராணியற்று
இருக்கிறேன்
நான் உன்னையும் உன் நட்பையும்
இங்கயே விட்டுவிட
முடிவெடுத்து விட்டேன்

என்னை நீ ஒருவேளை
நன்றி இல்லா ஐந்தறிவு ஜீவன்
எனலாம்
ஆறறிவு கொண்டவன் நீ
நன்றாய் யோசித்து பார் யார்
நன்றி இல்லாமல் நடந்து
கொண்டதென்பது உனக்கே விளங்கும்

நான்
கூடா
நட்பு கேடாய் முடியும்
என உணர்ந்து கொண்டது போல்  ...

Wednesday, February 15, 2012

கண்ணீர்














என்
மனவலிகளை தாங்கித்தாங்கி 
அழுகையில் தேம்பி தேம்பி
தீர்ந்துவிட்டது என்று தானே
எண்ணிகொண்டிருந்தேன்
ஒருவேளை கண்ணீர்
வற்றியதால் தான்
கண்களில் இந்த செந்நீரோ ??

இது அருவியாய் கொட்டி

என் உடலில் உள்ள ரத்தம்
மொத்தமாய் தீர்ந்தாலும் கூட
என் கவலைகள்
தீரப்போவதே இல்லை

புரியாதவை !!











எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை
சில கவிஞனின் கவிதை வரிகளும்
சில காதலனின் காதல் வலிகளும் 
கவிதை வரிகளை, குறிப்பிட்ட வாசகனும்
காதல் வலிகளை காதலியும்
உணராத போது தான்
அது இன்னும் ரணமாகிறது
மிகவும் வலிக்கிறது

Tuesday, February 14, 2012

காதலர் தினம்

 














அடிமைப்பட்டு துன்புற்றிருந்தவன்
சுதந்திரம் அடைந்த நாள்
சுதந்திர தினம்
சுந்திரமாய் சுற்றித்திரிந்தவன்
காதலில் அடிமைப்பட்டு
துன்புறுவது காதலர் தினம்
இன்னமும் நான் காதலில் விழாததால்
வெறும் சுதந்திர தினத்தை
மட்டுமே கொண்டாடிக்கொண்டிருக்கிறேன்
சந்தோசமாய்!!!

Thursday, February 2, 2012

வலிகள்













அடுத்தவனுக்கு எளிதாய்
புத்திமதி சொல்லி விடுகிறேன்
வரும்முன் காக்க வழிமுறைகள் 

கூட தெரிந்து வைத்திருக்கிறேன்

ஆனாலும் கூட  
காய்ச்சலும், தலைவலியும்
மட்டும்மல்லாமல்
காதலும் கூட எனக்கும்
வரும் போது தான் புரிகிறது
அது படுத்தும் பாடு
ம்
அது தரும் வேதனைகளும்
வலிகளும்.....