Tuesday, January 31, 2012

நரகம்













இறந்த பிறகு
மனிதனுக்கு மட்டும்
சொர்க்கம் நரகம் என்றுண்டாம்
நானறியேன்..
இவற்றில் எல்லாம் ஒருபோதும்
எனக்கு நம்பிக்கை இல்லை
என்றபோதும் ஒருவேளை
அவைகள் இருந்திருந்தால்
நானிறந்தால் எது கிடைக்கும் என
பலமுறை சிந்தித்துப் பார்த்திருக்கிறேன் ...

சொர்கமா?? நரகமா?? என்று

இவ்வுலகில் நான் வாழ்ந்த
என் வாழ்க்கை  கணக்குகள்  
ஆராயப்ப்படுமாயின் அதில்
துரோகம் என்னும்

எண்ணைச்சட்டியில் பல முறை
பொரிக்கப்படிருக்
கிறேன்,
தீய எண்ணங்கள் என்னும் 
விஷத்தால் தாக்கப்பட்டிருக்கிறேன்
சிலரது வார்த்தைகள் எனும் 

அம்பினால் துளைக்கப்பட்டிருக்கிறேன், 
பொய்கள்,பொறமை வஞ்சம்
என்னும் நோயினால் அவதிப்படிருக்கிறேன்..
ஏமாற்றம்,
அவமானம் என்னும் சுத்தியால்
பொடிப்பொடியாய் நொறுக்கப்பட்டிறுக்றேன்
என் ரத்தமெல்லாம் இழந்திருக்கிறேன்...

இதைக்காட்டிலுமா
அந்த புது நரகம் 
கோரமாய் இருந்துவிடப்போகிறது?
ஆனால் இவற்றை காரணம் காட்டி நான்
நான் சுவர்க்கம் வேண்ட விரும்பவில்லை
என்னிடம் இரண்டில் ஒன்று
தேர்வு செய்ய சந்தர்ப்பம் கிடைக்குமாயின்
நான் மறுபடியும் நரகமே தரும்படி
வேண்டிக்கொள்வேன்
காரணம்,பல்வேறு கஷ்டங்களை
அன்பவித்திருந்தாலும்

நான் பிறந்ததால் தானே இப்படி

இவையெல்லாம் எனக்கு நடந்தது
இவ்வுலகில் நான் பிறந்த தவறிற்கு
தண்டனை ஒருவேளை அந்த
நரகத்திலாவது எனக்கு கிடைக்கட்டும் 

காத்திருக்கிறேன் அந்நரகத்தைக்காண
ஏற்றுக்கொள்கிறேன் மகிழ்வுடன்

ஒப்பிடுதல்


 














நான், ஒப்பிட்டு பார்த்தல் என்பது
வாழ்வின் மிகப்பெரிய வலி
என்பதை அனுபவமாகவே
உணர்ந்தவன்

என் பெற்றோர் என்னை என்

சகோதரனுடன் ஒப்பிட்டனர்
அவர்களுக்கு சகோதரனே 

பெரிதாகத்தோன்றியது
என் ஆசிரியர் பிற மாணவருடன்
ஒப்பிடுப்பார்த்தனர் அவர்களுக்கோ
மற்றவரே என்னைக்காட்டிலும்
புத்தியுள்ளவர்களாய் தெரிந்தனர்
என் தோழர்களுக்கோ
என்னைக்காட்டிலும்
அவர்கள் நண்பர்களும், அவர்களின்
 உறவுகளுமே முக்கியமாய் தெரிந்தது
என்னை விட்டு விலகிச் செல்ல காரணமாய்
என் காதலிக்கோ வேறொருத்தன் நல்லவனாய்
தெரிந்தது போலும் 

இதே போல் ஒவ்வொரு முறையும்
யாரோ ஒருவரிடம் பரிதாபமாய்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்..

ஆனால் எனக்கும் இந்த பழக்கத்திற்கும்
ஏழாம் பொருத்தம்
நான் இரண்டு வழிகளில் எதில்
செல்லவேண்டும் என்பதை ஒப்பிடும்
போதும், இரண்டு பொருட்களில்
எதை தேர்ந்தெடுக்கவேண்டும்
என்று எண்ணும் போதும்
என் தேர்வென்னவோ தவறாகவே
அமைந்துவிடுகிறது சிலவேளைகளில்
இரண்டுமே கூட கிடைக்காமல் போகிறது

எனக்கு இப்படி அமைவதை கூட
பொறுத்துக்கொள்வேன் ஆனால்
மற்றவர்களின் ஒப்பிடுதல் ??
இது பற்றி ஒரு காலத்தில்
கவலைப்பட்டாலும் இந்நாளில்
வருந்துவதில்லை காரணம்
யாரேனும்
குரங்கிற்கு வாழைப்பழ
த்தைக்காடிலும்
தேன் சுவையானது என்று
ஒப்பிட்டு காட்டி வெல்ல முடியுமோ ??

என்னை மற்றவருடன் ஒப்பிட்டு
புறக்கணிப்போரை நான் குரங்காகவே
கருதுகிறேன்..
அவர்கள் ஆயுள் உள்ளவரை
என்னைபோன்றோரின்
மதிப்பை  உணரப்போவது இல்லை

Monday, January 30, 2012

பாலை












என்னவள்
துன்பங்களாலும் தோல்விகளாலும்
வறண்டு, வற்றிப்போன
 
என் மனதை வளமாக்க
எந்நேரமும் ஓயாமல்
அழகிய வார்த்தை மழையால்
மாற்ற முயற்சி செய்துகொண்டிருந்தாள்

அவள் முயற்சி வீண் போகததாய்

கண்ணீரும் தீர்ந்து போய்
பாலையாய் மாறிப்போன  என்
கண்களில் சிறு கண்ணீரும்
ஆனந்தமாய் நிறையத் துவங்கியது
இந்த கல்லிலும் சிறு உயிர்த்துளிர்
விட ஆரம்பித்தது

அது ஏனோ இந்நாளில்

மண்வாசம் வீசுவதில்லை
என் மேகம் கருக்கவில்லை
மழையும் பொழியவில்லை 

ஆம்

என்னவள் சில நாட்காளாய்
என்னிடம் பேசுவதில்லை
என்னிடம் பேசாமல் இருப்பது
எனக்கான தண்டனையென்று
நினைக்கின்றாள்  போலும்
இந்த தண்டனையும் கூட
மனம் நொந்தபடி ஏற்றிருப்பேன்
ஆனால் இதன் காரணம் கூட
இன்னும்  எனக்கு தெரியவில்லை
"காரணம் சொல்லாமல் தண்டனை"
உயிர் மட்டும் போகாமல்
உடல் தொங்கும் தூக்கென்பேன்

ஒரு வேளை பழைய நிலைக்கு

மாறிப்போகிறேனா என்று
ஆராய்ந்து பார்க்கிறாளோ ??
என்னை பழைய நிலைக்கு மாற்றப்
பார்க்கிறாளா இல்லை
அவள் தான் என்னை மாற்றினாள்
என்ற அகந்தையா??, அவளைத்தவிர
யார் அறிவார் ???...

நான் வழி தவறி நடக்கும் போது
வழிகாட்டியாய், நான் இருட்டில்
நடக்கும் போது வெளிச்சமாய்,
சவமாய் மாறும் போது புது உயிராய்
உயிர் தரும் சுவாசமாய்
மட்டுமே அவள் வருவாளாகின்
அவள் இப்போது வரட்டும்
இப்போது வழி தவறி இருட்டில் தான்
சவமாய் நடந்து கொண்டிருக்கிறேன்

நான் சோகமாய் இருக்கும் போது

ஆறுதலாய் பேச
நான் தவறுகள் செய்யும் போது
என்னை திருத்த தான் அவள் வார்த்தைகள்
இருக்குமானால், 

அவளே இன்றி அவளின் வார்தைக்களுமின்றி

நான் மட்டும் பூஞ்சோலையாய்
இருந்தென்ன பயன்...
பழையபடியே
வானம் பார்த்த,மழையே கண்டிராத
பழைய பாழ் நிலமாய்
மாறவும் துணிந்துவிட்டேன்...

ஒரு வேளை பழைய நிலைக்கு

என்னை மாற்றுவது தான்
உன் எண்ணமாயின், உன் ஆசையை
நிறைவேற்ற ஒரு வாய்ப்பாய்,
உனக்காய் எதுவும்
செய்தது இல்லையே என்ற
என் நெடுநாளைய வருத்தத்தை
போக்கிய பலன் உன்னையே சேரும்

நீ மனமாறுவாய் என்று
பெருமளவில்
நம்பிக்கை இருந்தாலும்
மனதுக்குள் மாறாமல் போனால்
என்ற நெருடலும் இருக்கத்தான்
செய்கிறது..
நீ இந்த வீணாய்ப்போன
நிலத்தின் மேல் பெரும் மழையாய்
வேண்டாம் வெறும்
கானல் நீராகவது நின்று
என்னை காப்பற்றிக்கொடு

Saturday, January 21, 2012

அழுகை

 














ஆதி முதல் அந்தம் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
எவ்வளவோ எதுஎதுக்கோ
அழுதும் சோகத்தை சிறிதும்
குறைக்க முடியா கண்ணீரை,
நன்றிகெட்ட மனிதருக்கு
சாபமென கடவுள்
தந்துவிட்டதாய் நினைக்கிறேன்

அதிலும் என் வாழ்வில்

வாழ்நாள் முழுவதும் தொடர
விதி செய்திட்டார் போலும்

பிறந்த போது பசிக்கு அழுதேன்

தாய் பாலூட்டி சோறூட்டி
பசி போக்கினாள்
வளரும் போது அழுதேன்
தந்தை என் துயர் தீர்த்தார்
படிக்க முடியாமல் அழுதேன்
ஆசிரியர் எனக்கு உதவினார்
முதல் வகுப்பு முதல்
கல்லூரிப்படிப்பு வரை
நான் அழும் போதெல்லாம்
தோழரெல்லாம்
தோள் கொடுத்து காத்தனர்
காதல் தோல்வியால் அழுதேன்
அப்போதும் சகமனிதனால்
ஆறுதலை பெற்றேன்

இன்றோ

கண்ணீர் தீர்ந்துவிட்டது
அழுகை தீரவில்லையே
புலி வருவதாய் பொய் சொல்லி
ஏமாற்றியவனை, இறுதியில் புலி
வந்து அடித்ததை போல
அப்போது நான் பொய்யாய்
தேவயற்றவைகளுக்காக
அழுத போதும் உதவிய கரங்கள்
என் அழுகையால் நானே
மூழ்கிச் சாகும் நிலைமையில்
இருக்கும் போது முடங்கிப்போனது

அன்று கிடைத்த பாசமும்,

பாதுகாப்பும், கண்ணீரை துடைக்கும்
நடப்பும் இன்றெங்கே போனது
இதை நினைக்கும் போது
கண்ணீரை கடன் வாங்கியாவது
அழத்தோன்றுகிறது  எனக்கு 

பல ஜென்மங்களாய் தவமிருந்து

இந்தச் சாபம் பெற்று வந்தேனா
இதிலிருந்து விடு பட முடியாமல்
தவிக்கிறேன் 


இறைவா !!!!!!!!!
நானொன்றும் என்
அழுகையை என் மனக்குமுறலை
சுத்தமாய் தீர்த்துவிட
உன்னிடம் வேண்டவில்லை
என் சிறுவயதில் என் துயர் தீர்க்க
தாயாகவோ,தந்தையாகவோ
நண்பனாகவோ, ஒரு சக மனிதனாக 
இவர்களின்  உருவெடுத்து வந்தாய்
இப்போதும் கூட இதே போன்ற
சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறேன்
நீ திரும்பவும் வருவாய் என்று
நம்பிக்கொண்டிருக்கிறேன்

அப்படி நீயே வருவாயானால்
மனிதனே இல்லாத உலகில்
தனியாய் சுற்றித்திரிபவன் போல்
அனாதையாய், எல்லோராலும்
விளக்கி வைக்கப்பட்டவனாய்
எல்லோராலும் வெறுக்கப்பட்டவனாய்
தனிமையில் வாடி
கண்ணீரிலும் தீர்ந்த நிலையில்

தவித்துக்கொண்டிருக்கும்
என் மேல் இருக்கட்டும்
உம் முதல் ஆசீர்வாதம்
உன் முதல் கரிசனம்

அது என் வாழ்நாளில் அழுகையை
மறக்கச்செய்யட்டும்  


மற்றவர் என்னை கரிவேப்பில்லையாய்
உபயோகித்து தூர வீசி ,
என்னை வார்த்தைகளால் வதைத்து
உறவுகள் எல்லாம் பொய் என்றென்னை
எண்ண வைத்து எனக்கு யாருமே
இல்லை என நம்பவும் வைத்துவிட்டனர்

எனக்காய் நீ மட்டும் தான் இருக்கிறாய்

என்று மற்றவருக்கு  வேண்டாம்
மிகக்குறைந்த அளவில்
எனக்காவது உணர்த்து


Saturday, January 14, 2012

வாழ்த்து அட்டை
















இன்று
என்னவளின் பிறந்த நாள்  


முன்பே   என்னவளுக்காய்
அவள் பிறந்த நாளின் போதும் 

பிற விழாக்களின் போதும்
நான் வாங்கிச் சேர்த்த

பரிசுப் பொருட்களுடன் ,
வாழ்த்து அட்டைகளுடன்,

இந்தமுறை
கடை கடையாய் ஏறி இறங்கி
பல மணிநேரம் தேடித்தேடி 
நான் எடுத்த வாழ்த்து அட்டையும்

அவளை  சேராமலே, 
என் பெட்டிக்குள்ளே
தூங்கவிருக்கிறது...  


நான் எப்படி காதலை தெரிவிக்காமல்
நொந்து போகிறேனோ ,
அப்படியே அவளைச் சேராமலே
என் வாழ்த்துக்களை கூறாமலே 

பெட்டிக்குள் முடங்கிப்போகிறது 
நான் எப்படி அவள் காதலை பெற
காத்திருக்கிறேனோ
அதே போல்
அவளை வாழ்த்த காத்துக்கிட
க்கின்றது 
என்னைப்போலவே அதிர்ஷ்டம் இல்லா
வாழ்த்து அட்டைகள்