சிறு விதையாய் விதைக்கப்பட்டேன்
செடியாய் துளிர் விட்டு
பெரும்மரமாய் உயர்ந்து விட்டேன்
என் நிலையில் நிலைத்திருந்தேன்
என் நிழலால் இவ்உலகை அணைத்திருந்தேன்.....
இமை பொழுதில் ஓர் இலையுதிர் காலம்
இலைகளை இழந்தேன்
கிளைகளை இழந்தேன்
கனவுகளை இழந்தேன்
என் பெருமையையும் இழந்தேன்
புகழ்ந்தோர் வசை பாட,
இப்போதொரு பட்டமரமாகவே மாறிப்போனேன்.....
வேர்களாய் நம்பிய சில நண்பர்களும்
இனி இம்மரம் மலராதென
பறவைகளாய் பறந்தோட
நம்பிக்கை இழந்து, சற்றே
கலங்கித்தான் போனேன் .....
இருட்டில் விதையாய் கிடந்த போதும்
பூமியை துளைத்து எழுந்த போதும்
மரமாய் வாழ்ந்த போதும்
பட்ட துயரினும் கொடுமை
இப்பரிகாச பறவைகளின் வார்த்தைகள்.....
அனைத்தையும் இழந்தாலும்
சூரியனாய் கடவுளும்,
மழையென என் கனவுகளும்,
நிலத்தடி நீராய் என் பெருமுயற்சியும் ,
காற்றாய் என் தன்னம்பிக்கையும்,
நல்ல நண்பர்கள் சிலரும்
என்றும் என் துணை நிற்க
விருட்சமென எழத்தான் போகிறேன்
என் பணியை தொடரத்தான் போகிறேன்
தேவை எல்லாம் ஓர் வசந்தகாலம் மட்டுமே!!!!!!!
என்று வருமோ அந்த வசந்த காலம் ???
NICE ANNA CHELLLLLO :)))) SUPERAH IRUKIE ELLAM
ReplyDeletewow! arumaiya iruku naveen!!
ReplyDeletetannambikai marrum vida muyarchi rendum rendu kaikal....un kaiye unaku tunai....