பெண்ணே !!! அழகாய்
வெட்கப்படுதலெப்படியென்று
நீ ஓர் விதி செய்திடு
இனி உன் விதிப்படியே
நாணத்தை தவிர்ப்பவர்களும்,
அதை மறந்த சில பெண்களும்
வெட்கப்படட்டும்
காரணம் அதை போதிக்க
உன்னை விட்டால் வேர்யாரும்
இல்லையாம் இவ்வுலகில்
என்னெனில் அந்த பிரம்மனுக்கும்
உனக்கு போட்டியாய்
ஒருவளை உருவாக்கும்
திட்டமில்லையாம்
எனவே உன்னுடனனேயே
அழிந்துவிடாமல்
உனக்கு மட்டுமே தெரிந்த
இந்த கலையை
பார் முழுதும் பரப்பிவிடு

No comments:
Post a Comment