Monday, January 14, 2013

பிறந்தநாள் பரிசு
















இன்று என்னவளின் 
பிறந்தநாள் 

வழக்கம் போல் 
வாழ்த்து அட்டைகளும் 
பரிசுகளும் வாங்கிவிட்டேன்
வெகு முன்னரே 

இந்த முறையும்  வழக்கம் போல்
அவளிடம் கொடுக்காமாலும்
விட்டுவிட்டேன்

அவளிடம் ஒருவேளை 
எனது வாழ்த்து அட்டை 
சேர்ந்திருக்குமாயின்
இது அவளுக்கு கிடைக்கும் 
எட்டாவது வாழ்த்து 
அட்டையாய் இருந்திருக்கும்

என் பரிசுகள் அவளை 
சேர்ந்திருக்குமாயின் 
அவள் வீடே நிறைந்திருக்கும்  

இங்கு யார் 
துரதிர்ஷ்டசாலி 

ஒவ்வொரு முறையும் 
அவளை சேராமலே 
பெட்டிக்குள் முடங்கும் 
என் வாழ்த்து அட்டைகளும்
பரிசு பொருட்களுமா ??
அவைகளை  அவளிடம்
சேர்க்க தவறும் நானா??
என் அன்பை தவற
விட்டுக்கொண்டேயிருக்கும் 
என்னவளா ??

என்னையாவது அவளிடம் 
சேர்த்துவிடு கெஞ்சியது
நான் அவளுக்காய் 
பார்த்து பார்த்து வாங்கிய 
பரிசு

அதனிடமும்  சொல்லியேவிட்டேன் 
உன்னையும், அவளையும் 
எனக்கென தேர்ந்தெடுத்த
என் மனதே அவளை 
சேராத போது உன்னை சேர்ப்பது 
மட்டும் எப்படி நியாயமாகும்

பரிசு என்பதே நம் நினைவாய் 
ஒருவருக்கு தருவது தான் 
என்னவளுக்கு 
நான் தரும் பிறந்த நாள் 
பரிசே 
அவள் வாழ்வில் நானோ 
இனி என் நினைவாக எதுவுமே 
அவளுக்கு இல்லை என்பதே

தேவதைகள் மற்றவர்
வாழ்த்துவதால் தான் வாழும்
என்பதில்லை, என்னவளும் 
ஓர் தேவதை தான்

இனி நூறு வருடம் 
சந்தோசமாய் 
வாழட்டும் என் நினைவுகலன்றி .. 
 

Thursday, January 10, 2013

இராசி பலன்














விலகி சென்றவர்கள் 
விரும்பி வந்து 
இணைவார்களாம் 
என் இன்றைய 
இராசி பலன் சொன்னது

வந்தால் நல்லது தான் 
 
காரணமே சொல்லாமல் 
விலகி சென்றவர்கள் 
ஏதோ காரணத்துக்காக 
வராமல் என் அன்பை 
என் நட்பை உணர்ந்து 
வந்தால் சரி தான்

இனிமேலாவது  
கண்டிப்பாய் நம்புவேன் 
நாள் பலனை அல்ல 
உண்மையான அன்பு 
என்றுமே நிலையானதென்று..

வாழ விரும்புகிறேன்












என்னவளே
எதற்கிங்கே வந்திருக்கிறாய்
அன்று  நான்  உனக்கு 
கொடுத்த ஒற்றை ரோஜாவை 
இன்று எனக்கு வைத்து விட்டு 
போக வந்தாயோ??

நான் இருந்த போதே
கொடுத்த பொருளும்,
கொடுத்த வாக்கும் 
ஏன் உன்னிடம் கொடுத்த 
என் மனமும் திரும்ப பெறாதவன்...
இன்றும், என்றுமே அப்படித்தான்
இனிமேலா உன்னிடமிருந்து 
இவைகளைப் பெற  போகிறேன்  

அது தெரிந்து தான் 
கொடுத்து விட்டு சென்ற
பொருளை வைத்துவிட்டு 
செல்ல இன்று வந்தாயோ நீ ?

போய் விடு பெண்ணே !!!
இல்லையேல்  எழுந்து வந்து  
இவை எல்லாவற்றுடன்
அன்று சொல்ல மறந்த(?)
என் காதலையும் சொல்ல 
நினைக்கிறது மௌனித்த
என் உதடுகள் 
உன்னுடனயே கிளம்பி 
வர திரும்பவும் துடிக்கிறது 
என் துடிப்பு நின்று போன
இதயம் 

போய் விடு பெண்ணே !!!
உன்னுடன் வாழாத
என் வாழ்க்கையின் பெரிய 
ஏமாற்றத்தை விட 
இனிமேல் உன்
நினைவுகள் என்றுமே
என்னுடன் எனும் 
நிம்மதி பெருமூச்சில்
தனிமையில் நான் 
" வாழ  விரும்புகிறேன் "

Monday, January 7, 2013

மறதி












மறக்காமல் நீ 
குடை எடுத்து வந்ததால்
"உன்னை நனைக்காமல் 
விடுவதில்லை" என்று 
நினைத்திருந்த மழை,
தன்னையும் மறந்து 
சோகத்துடன் காத்திருக்கிறது
வேறொரு அதிர்ஷ்ட 
நாளுக்காய்

உலகம் மழையை நம்பி 
மழையோ உன் மறதியை 
நம்பி 

இன்னமும் இவைகளின் 
காத்திருத்தல் தொடர்கிறது  

தோழியின் பரிசு










தோழியே!!!!
என்னை நிராகரித்து
தனிமை படுத்தி 
என்னுடன் பேசாமல் 
நீ என்னை விட்டு 
விலகிச் சென்றதால் 
என் மகிழ்ச்சியை
பறித்துக்கொண்டதாய்
உனக்கோர் எண்ணம்

உண்மையில்
நீ எனக்கு அளவில்லா 
அழகிய நினைவுகளையும் 
கவிதை எழுத நிறைய
வாய்ப்புகளுமே தந்து 
விட்டுச் சென்றிருக்கிறாய்

இது ஒன்றும் எனக்கு 
இழப்பல்ல நீ என் நட்புக்கும்
இனி வரும் என் வாழ்க்கைக்கும் 
நீ தந்து சென்ற பரிசு 

நீ பறித்துச் சென்றதாய்
எண்ணிக்கொண்டிருந்த 
என் மகிழ்ச்சி கண்டிப்பாய்
இரட்டித்து தான் இருக்கிறது
எனக்குள் 

அதை  கொண்டு, அதை தந்து 
என்னால் வாழவும் முடியும் 
என்னை சேர்ந்தவரை
வாழ வைக்கவும் முடியும்

எனினும் இவையெல்லாம் 
உன்னால், உன் பிரிவால்
கிடைத்ததால்

உனக்கே உரித்தாகட்டும் 
என் பல கோடி  நன்றிகள்

புத்தாண்டு












புத்தாண்டு 
ஆம் நம் வாழ்வில் 
புதியதாய் ஓர் ஆண்டு

கடந்த ஆண்டில் வாழ்ந்த 
பலருக்கு இல்லாமல் 
நமக்கு மட்டுமே 
காணக்கிடைத்த 
அற்புதம் தான் இந்த 
புதியதாய் ஓர் ஆண்டு


சிலரை தீராத் துயரிலும்
வெகு சிலரை இன்பத்தில்
நிறைத்து நம்மை 
ஆண்டு வந்த பழைய 
ஆண்டு புதியவனுக்கு 
வழிவிட்டுச்செல்ல,

நமக்கு தலைவனாய் 
புதிய ஒளியுடனும் 
நம்பிக்கையுடனும்
பதவி ஏற்றிருக்கிறது
புதியதாய் ஓர் ஆண்டு

புதியவனே !!!
உன் ஆட்சி சிறப்பாய்
நாட்கள் இனிதாய்  
அமைய வேண்டி நிற்கும் 
பல கோடி மக்களுள் 
நானும் ஒருவனாய்
எதிர்பார்த்திருக்கிறேன்

உனக்கு ஓர் வேண்டுகோள் 
கொண்டாத்ததுடன்
குதுகலத்துடனும் உன்னை 
வரவேற்பது போலவே 
தான் உன் முன்னோரையும்
சிறப்பித்தோம்
அவர்கள் பெருமளவு 
விட்டுசென்றதோ 
துன்பத்தையும், துயரையும்,
பசியையும், பிணியையும்,
போரையும், பிழவையும் தான் 
நீயாவது மாற்றம் தந்திடு 
எம் மக்களுக்கு 

கடமைகளும் கனவுக்குள் 
எனக்குள்ளும்  நிறைந்திருக்கிறது
அது வெறும் சுமைகளாகவும் 
நிறைவேறாத நினைவுகளாகும்
என்னில்  மறைந்துவிடாமல் 
நிச்சயமாய் நிறைவேறிட 
வரம் தருவாய் இறைவன் 
துணையுடன்  

காத்திருக்கிறேன் 
நம்பிக்கையுடன்....