
தனியே சிரிப்பதும்
தனக்குள்ளே பேசுவதும்
தனிமையில் தவிப்பதும்
உலகை மறப்பதும்
ஏன்
சந்தோஷத்தில் அழுவதும்
துக்கத்தில் சிரிப்பதையும்
சிலர் பேத்தல் என்றார்கள்
நான் காதல் என்றேன்
எனக்கு
மன அழுத்தம் என்போர்க்கு
எப்படி தெரியும் அவள்
நினைவுகளை
பல வருடங்களாய்
தேக்கிவைப்பதால் தான்
இந்த அழுத்தமென்று
அவள் எண்ணங்கள் மட்டுமே
நிறைந்ததால் தான் அது
மன நிறைவென்றேன்
மற்றவரோ அதை
மனசோர்வென்றனர்
உலகமே புரியாமல், அறியாமல்
ஒரே சிந்தனையுடன்
வலிகளும் வேதனைகளும்
இருந்தும் அதை மறந்தோ
மறைத்தோ வாழ்வது
போன்று பல
பொதுவான அறிகுறி
காதலுக்கும் மனநோய்க்கும்
இருக்குமென்பீர்களேயானால்
நான் சொல்லவேன்
காதலிருக்கும் எல்லா
மனமும்
அந்த மனம் பெற்ற
எல்லா மனிதருமே
மன நோயாளி தான்
சரி யாரோ என்னமோ
சொல்லிவிட்டு போகட்டும்
இதை பைத்தியம் என்றால்
இதன் வைத்தியம்
என்னவள்,
என்னவள் காதல் மட்டும்
தான்
என்னவளே !!!
நான் கொண்டிருப்பது
காதலோ, பிறர் சொல்வது
போல் மனநோயோ
எதுவாகினும் எப்படியாவது
என்னை காப்பாற்றி
கொடு உன்னிடம்