Sunday, December 26, 2010

குறிஞ்சிப்பெண்

சந்தேகமெல்லாம் இது மட்டும் தான்  
குறிஞ்சி மலர் பனிரெண்டு வருடத்திற்கு
ஒருமுறை தான் பூக்குமாமே??
அப்படியெனில் பெண்ணே
உன் வயதில் ஒன்று அதிகரிக்க
பனிரெண்டு வருடம் ஆகுமோ???

Friday, December 17, 2010

உன் புன்னகையும் மழைதான் !!!



"இந்நாளில் அரிதாகிக்கொண்டே போகிறதே??
மண்ணை சுத்தமாக்கும் மழையும், என்
மனதை தூய்மையாக்கும் உன் புன்னகையும்!!!"
நாங்கள் வாழ்வதே அதை நம்பித்தானே என்ற 
வருத்தத்துடனும் வேதனையுடனும் 
நான் வாழும் பூமியும்,

அதற்கு பாரமாய் நானும்!!!!!!!!!


Wednesday, December 8, 2010

Miss U A Lot Dear!!!!!


நம்மை அறியாமல்
விழிகளில்  வழிந்தது
கண்ணீர்...! காரணம்,
நாம் அறியாமல்,
நாம் நேசித்தவர்கள்,
நமக்கு  பிரியமானவர்கள்
நமது  உயிரானவர்கள்
நம்மை விட்டு  பிரிந்து
வெகு தொலைவிற்கு சென்றுவிடுகிறார்கள்
இது  ஈடு  செய்ய  முடியா  இழப்பு தான்
இருப்பினும் நண்பா....
உயிர்கள்  பிரியக்கூடும்
உணர்வுகள்  பிரிவதில்லை
உணர்ச்சிகள்  பிரிவதில்லை
பாதைகள்  பிரியக்கூடும்
பாசங்கள்  பிரிவதில்லை
பிணைப்புகள்  பிரிவதில்லை
இந்தப்பிரிவு  நிரந்தரம்  அல்ல
இந்த சோகமும்  நிரந்தரம்  அல்ல
கண்களால்  பார்க்க  முடியாமல் போனாலும்
நமக்கு  அன்பானவர்கள்
நம்மோடும், நம்  நினைவுகளோடும்
என்றும்  என்றென்றும் நிலைத்திருப்பார்கள்

Friday, December 3, 2010

ஒரு மரத்தின் தேடல்

இதை என் முதல் கவிதை  எனலாம்
போன வருடமே எழுதி விட்டாலும்
என் Blogger இல் இன்றே உயிர் பெற்றது
சிறு விதையாய் விதைக்கப்பட்டேன்
செடியாய் துளிர் விட்டு
பெரும்மரமாய் உயர்ந்து விட்டேன்
என் நிலையில் நிலைத்திருந்தேன்
என் நிழலால் இவ்உலகை  அணைத்திருந்தேன்.....

இமை பொழுதில் ஓர் இலையுதிர்  காலம்
இலைகளை இழந்தேன்
கிளைகளை இழந்தேன்
கனவுகளை இழந்தேன்
என் பெருமையையும்  இழந்தேன்
புகழ்ந்தோர்  வசை பாட,
இப்போதொரு  பட்டமரமாகவே மாறிப்போனேன்.....

வேர்களாய் நம்பிய சில நண்பர்களும்
இனி  இம்மரம்  மலராதென
பறவைகளாய்  பறந்தோட
நம்பிக்கை இழந்து, சற்றே
கலங்கித்தான்  போனேன் .....

இருட்டில் விதையாய் கிடந்த போதும்
பூமியை துளைத்து  எழுந்த  போதும்
மரமாய் வாழ்ந்த போதும்
பட்ட  துயரினும்   கொடுமை
இப்பரிகாச  பறவைகளின்  வார்த்தைகள்.....

அனைத்தையும் இழந்தாலும்
சூரியனாய் கடவுளும்,
மழையென என் கனவுகளும்,
நிலத்தடி நீராய் என் பெருமுயற்சியும்  ,
காற்றாய் என் தன்னம்பிக்கையும்,
நல்ல நண்பர்கள் சிலரும்
என்றும் என் துணை நிற்க
விருட்சமென எழத்தான் போகிறேன்
என் பணியை தொடரத்தான்  போகிறேன்
தேவை  எல்லாம்  ஓர் வசந்தகாலம் மட்டுமே!!!!!!!

என்று  வருமோ  அந்த  வசந்த  காலம் ???

Saturday, November 13, 2010

காதல் சொல்ல வந்தேன்

ஒரு வேலை இந்த படத்தின் நாயகன் climaxil கவிதை சொல்லிருந்தால் இப்படி இருந்திருக்குமோ?
 
முயன்றால் சிகரத்தை தொடலாம்
உன்  காதலையும்  கூட  பெறலாம்
ஆரம்பித்துவிட்டேன்  என் முயற்சியை;
ஆன  வரை   முயன்றுவிட்டேன்
சாகும் வரை  துணிந்துவிட்டேன்
பேருந்து  மோதிய  வலியை விட
நீ  பிரியும்  நொடியே  கொடுமை
காதல்  சொல்ல  வந்தேன்
மரணத்தை பெற்று  கொண்டேன்
நான்  வாங்கி  வந்த சாபம்
இனி நீ அழுதென்ன  லாபம்
பிறந்த  பொழுது  தாய்  சொன்ன  "ஆரிரோ"க்கு  மேல்
இறக்கும்  பொழுது  நீ  சொன்ன "I LOVE YOU"
இது போதும் பெண்ணே
இது போதும்
சொர்க்கத்தில் இடம் நிரந்திரம்
உன் மனதிலும் தான்