Monday, January 26, 2015

வெற்றிப்படிக்கட்டு
















அடுத்தவரின் இல்லாமை, இயலாமை
இதை கேலி செய்பவர்களுக்கு
இல்லாமயே இல்லையோ
உலகில் உள்ள அனைத்துமே பெற்றனரோ??
இயலாமையும் கிடையாதோ
பாரில் அனைத்தையும் மாற்றிடுவரோ ??

அடுத்தவரின் குறைபாடை குத்தி நோகடிக்கும்
அவர்களுக்கு நல்ல பண்பு தான்
மிகப்பெரிய இல்லாமை
நல்ல நட்பை பேணிக் காக்கும்
திறனில்லாதது அவர்களது இயலாமை
இதைக்கூட புரிந்து கொள்ளாத,
அந்த மூடரின் அறியாமையும்,
நிலையில்லாத நிலைமையை
உயிர் உள்ளவரை
நிலைத்திருக்கும், நினைவிலிருக்கும்
வார்த்தைகளால் வசைபாடும்
வீணரின் எண்ணங்கள்
என்று தான் மாறுமோ??

குறிக்கோள்களன்றி அன்றைய
பொழுதை கழித்திட மட்டுமே
எண்ணும் லட்சியத்தின்
பொருளறியா பெருந்தகைகள்
பொறுத்திருந்து பார்க்கட்டும்
உண்மையான தேடலின்
பொறுமைக்கு கிடைக்கும்
மகத்தான வெற்றியை

அன்றைய நாள் முடிந்தாலே
வெற்றிதான் என்போருக்கு
வாழ்க்கைக்கான தேடலின்
புதிர் புரிய வைக்க முடியாத
விஷயம் தான்

கிடைத்த வாழ்க்கையை
கண் மூடி பூனையை போல்
வாழ்ந்திருக்கும் சிலருக்கு
எங்கே தெரிய போகிறது
வானம் என்ற ஒன்றிருக்கிறது
என்றும் அதை தொட்டு விடும்
முயற்சியில் நாம்
இருக்கிறோம் என்றும்

இன்றைக்காக மட்டும் அவர்கள்
தேடட்டும், என்றைக்குமாக நாம்
தேடிக்கொள்வோம் நம் வாழ்க்கையை
அவர்கள் வசைபாடும் வார்த்தைகளை
வெற்றிப்படிக்கட்டுக்களாய் கொண்டு

Wednesday, January 14, 2015

சுயநல நட்பு
















தேவையில்லாத  நண்பனின் 
நட்பு தனக்கு தேவை
என்கிற போது  மட்டும்
வேண்ட படுகிறதாம்
சிலருக்கு

நட்பிலக்கிணத்தை
புரியாமல் படித்தனரோ
அவர்கள் எண்ணத்தை 
போலவே வேண்டிய
பக்கங்களை படித்துவிட்டு
மீதி பக்கங்களை விட்டனரோ

விட்டபக்கங்களின் ஒவ்வொரு
வரிகளும் சொன்னது
சுயநலத்தின் தாக்கத்தை 
இதை அறியாமல் போயினரோ 

எந்த உறவிலும்
சுயநலம் இருந்தாலும்
அது இருந்திட கூடாத
தன்னிகரில்லா நட்பில் தான்
அதை வெளிப்படுத்துவாரோ

சுயநல நட்பும் ஒருவகையில்
துரோகம் தான் என்பதை
எந்நாள் தான் உணர்வாரோ
 
ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது
சுயநல நண்பர்களையும்
மாற்றக்கூடிய என்
உண்மையான நட்பை

புதிய நாள்



இன்றவளின் பிறந்தநாள்
அவள் பிறந்ததை கொண்டாட
காலம் படைத்திருக்கும்
புதிய நாள்
இணையில்லா சிறந்தநாள்
இமியளவும் மறக்க முடியாத
திருநாள் 

பிறந்தநாளில்
பரிசு கொடுப்பது தான்
நம் வழக்கம் என்றாலும்
எல்லாவற்றிலும் புதுமையை
எதிர்பார்க்கும் அவளுக்கு
பிறந்தநாள் பரிசு என்னிடம்
வாங்கிக்கொள்ள
பிரியமிருந்ததில்லை
எந்நாளும், எப்போதும் 

அதனால் தானோ என்னவோ
அன்றே நாங்கள் பழகிய நாட்களில்
என் காலம் முழுக்க நான் எண்ணி
வாழ்ந்திட எண்ணற்ற நினைவுகளை
தந்திருக்கிறாள் 

எனக்கு 
அவள் பிறந்தநாளில்
அவள் நினைவாய்
அவள் தந்த
அவள் நினைவுகள்
அம்மம்மா இது அதிகம் தான் 
பத்திரமாய் வைத்திருந்தேன்  
பாதுகாத்தும் வைத்திருப்பேன்

அவள் இல்லாத இந்நாளில்
அவைகளை நினைத்துக்கொண்டே
நிம்மதியாய் இருந்திருப்பேன்

ஆனாலும் நிறைவேறாத ஏக்கமாய்
நிலைத்திருக்கிறது 
அவள் தந்தது போலவே 
என் நினைவாய் நான்
அவளிடம் சேர்க்க மறந்திட்ட
என் பிறந்தநாள் வாழ்த்து

போகட்டும், என்னவளுக்கு இனி 
அனுதினமும் கொண்டாட்டம் தான் 
அவள் பற்றி நினைக்கும் போதெல்லாம்
அவளுக்கு பிறந்தநாள் தான்
அவள் நினைவுகள் வரும் நாளெல்லாம் 
அவள் என் வாழ்த்துக்களை
பெரும் நாள் தான்

கண்ணாடிக் காலணி
















கவிதை எழுத முடியுமோ
இதைக்கருவாய் கொண்டு
சவால்விட்டதோர்
சாதி மல்லி

முயற்சிப்போமேயென
மூளை முண்டியடிக்க
இதோ
எனது கிறுக்கல்


வாழ்க்கையே வெறுத்துப்போன
அடிமைப் பாவை
சிரிப்பை மறந்து போன
சின்ரெல்லாவை
புன்னகை பூச்சூட்டி
அன்பின் அறியாசனையேற்றி
அடிமையிலிருந்து அரசியாக்கிய
அந்த வினாடியின் சிறப்பு
இந்த கண்ணாடி செருப்பு

போய்விடாதே

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
என் இடது கண் துடிக்கிறது
கண்ணே உனக்கென்ன இடரலோ
கண்டிப்பாய் தெரியும் என்னை
உதவிக்கென அழைக்கமாட்டாயென;
நானாகவே வந்தாலும்
தவிர்த்துவிடுவாயென
தவித்து நிற்கிறேன்

சந்தோஷத்தில் தேவையில்லை
உன் சோகத்தில்லாவது நான்
துணை நிற்கிறேனே??

நம்பிக்கையில்லாமல் என்ன நட்பு
அப்படி மன்னிக்கமுடியாமல்
நான் செய்ததது என்ன தப்பு??
நம் நட்பை காட்டிலுமா
உன் பிடிவாதம் பெரியது
வலிக்குதடி இதயம்

வார்த்தைகளை உதிர்த்தால்
வலிக்குமென்றா
மௌனத்தினால் வதைக்கிறாய்
இது இன்னும் தான் கொல்லுதடி

போடி
வார்த்தைகள் தீர்ந்து போனது
உன் பிரிவை எழுத
வாழ்க்கையில் நிறைந்து போனது
வெறுமை நிறைய

நான் செய்தது உன்னால்
மறக்கமுடியவில்லை எனில்
தண்டித்துவிடு என்னை
மன்னித்து

மௌனத்தை உடைத்து
பெருக்கெடுக்கும் உன்
வார்த்தைகளுக்காய்
காத்திருக்கிறேன்

பேசிவிடு புன்னகையுடன்
காத்திருக்கிறேன் கேட்டுக்கொள்ள
வாழ்க்கையை வெல்லவும்  தான்

என் மனதின் பதில்










 


காதலிக்கிறாயா என சிலர் கேட்க
இல்லையென நம்பிக்கையுடன்

சொன்னாலும்
எனக்குள்ளயே நான் கேள்வி

கேட்டுக்கொண்ட போது
இனியொரு முறை

சாக துணிவில்லை
என்றது என் மனது..   

Monday, October 20, 2014

உறுத்தல்

 












மறக்க முடியவில்லை சில பெயர்களை
வெறுக்க முடியவில்லை சில பேர்களை ,
இரண்டுமே
உறுத்திக்கொண்டே இருக்கிறது
பெயர்கள் நினைவில்
சில பேர்கள் நெஞ்சத்தில்