Wednesday, October 24, 2012

பயம்















 
நீ அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது என்று
நான் ஒரு போதும் நான்
பயந்து போவதில்லை
ஆனால் கண்டிப்பாய்
வியந்து போகிறேன்
வான் தேவதைகளுக்கு
நிகராய் இல்லையில்லை
அதை விடவும்
அதுவும் நம் பூமியில்
ஓர் அழகியா என்று..

என்னைப்போலவே
உன்னைக்காணும்
எவரும் வியப்பில்
வீழ்வதால் என்
வியப்பிலும் கூட 
உண்மை இருக்கத்தான் 
செய்கிறது

No comments:

Post a Comment