கவிதை எழுத
வார்த்தைகளை தேடினேன்
கிடைக்கவேயில்லை
காரணம் இப்போது நீ
என்னுடன் இருக்கவில்லை
இப்போது தான்
புரிந்துகொண்டேன்
என் கவிதையின் வரியாய்
நீ தான் இருக்கிறாய் என்றும்
என் வாழ்க்கையின் வழியே
நீ தான் என்பதையும்
நீ பிரிந்தாய், வலியுடன்
நான் தொலைய
கவிதையின் வரிகளும்
மறந்தது, மறைந்தது
எனக்கே தெரியாமல்
என்னில்
இன்னமும் கிடைக்கவில்லை
என் கவிதைக்கான வரியும்
தொடர்ந்து உன்னுடன்
கை கோர்த்து நடக்கும்
என் வாழ்க்கைகாண வழியும்
என் தேடலின் தொடக்கம்
இனிதே ஆரம்பம்

No comments:
Post a Comment