உடைந்து போவேன்
என தெரிந்தும்
விலகி போனாயே
என்னவளே,
இறந்தே போயினும்
உன்னை மறந்து
போகமாட்டேன்
என அறியாயோ??
என் மூச்சாய் எனக்குள்
நிறைந்து போனவள் நீ
உன்னை எப்படி விலகிப்
போவேன்??
எது எப்படியோ நீ
என்னுடன் இல்லையென்பது
நிதர்சனமான உண்மை
அதை புரிந்து கொள்ள
எனக்கு அறிவும் இல்லை
இதை ஏற்றுக்கொள்ளும்
நிலையில் மனதும் இல்லை
உனக்கு இந்த வலி
தெரியப்போவதும் இல்லை
நீ தெரிந்து கொள்ளும்போது
நான் இருக்கபோவதும் இல்லை
உளறுவதாய் தெரிகிறதோ??
உண்மையின் உருவம்
இதுதானென்று
உணரும் நிலையில்
அழுதிடுவாய்
அன்றும் கூட உன்
கண்ணீரை துடைத்திட
முடியாமல் துடித்திடும்
நின்றுவிட்ட இதயம்
என் கல்லறையில்...
No comments:
Post a Comment