உண்மைதான் !!!
இப்போதைக்கு என் வாழ்க்கை
இருளில் தான் பயணிக்கிறது
முடிவில் நான் சேரும் இடம்
சொர்கமாய் இருக்கலாம்
நரகமாய் கூட கொல்லலாம்
இந்த வழியை தேர்ந்தெடுத்தவன்
நான், அதனால் வரும்
வலியும் ஏற்றுக்கொள்ள
வேண்டியவன் நான்
நண்பா, உன் நட்பு இதுதானா???
வாழ்ந்தால் வாழ்த்துவதும்
சற்றே தாழ்ந்தாலும்
தூக்கி எறிவதும் ???
சூரியனாய் வேண்டாம்
முடிந்தால் விட்டில் பூச்சியின்
ஒளி கொடு போதும்
நீ என் விழியாகவேண்டாம்
விமர்சிக்காமல் இரு போதும்
என் இலக்கை சீக்கிரமாய்
அடைவேன்
நீ அஞ்சாதே, உன் நண்பன் நான்
அது வெற்றி பாதையானால்
உன்னை என் தோளில் ஏற்பேன்
ஒருவேளை இல்லையென்றால்
என் நெஞ்சில் காப்பேன்
No comments:
Post a Comment