Sunday, August 26, 2012

மொழி
















அழகே!! நீ பேசுவது
தேவதைகள் மொழியின்
தமிழாக்கமோ ??
இல்லை நம் தமிழ் தான் 
நீ பேசுகையில் 
இவ்வளவு இனிதாய்
கேட்கிறதா?? 

நம் 
தமிழே அழகிய மொழிதான் 
அதுவும் நீ பேசும் போது 
இன்னமும் அழகாகிறது 

இப்போதைக்கு உன்
மொழி போல் வேறு
எந்த மொழியும் எனக்கு
புரிவதில்லை..
உன் சொற்கள் போல 
வேறெதுவும் என் காதில்
விழுவதுமில்லை

Saturday, August 25, 2012

பாதை
















உண்மைதான் !!!
இப்போதைக்கு என் வாழ்க்கை
இருளில் தான் பயணிக்கிறது
முடிவில் நான் சேரும் இடம் 
சொர்கமாய் இருக்கலாம் 
நரகமாய் கூட கொல்லலாம்

இந்த வழியை தேர்ந்தெடுத்தவன் 
நான், அதனால் வரும் 
வலியும் ஏற்றுக்கொள்ள 
வேண்டியவன்  நான் 

நண்பா, உன் நட்பு  இதுதானா???
வாழ்ந்தால் வாழ்த்துவதும் 
சற்றே தாழ்ந்தாலும் 
தூக்கி எறிவதும் ???

சூரியனாய் வேண்டாம் 
முடிந்தால் விட்டில் பூச்சியின் 
ஒளி கொடு போதும் 
நீ என் விழியாகவேண்டாம் 
விமர்சிக்காமல் இரு போதும் 

என் இலக்கை சீக்கிரமாய் 
அடைவேன் 
நீ அஞ்சாதே, உன் நண்பன் நான் 
அது வெற்றி பாதையானால் 
உன்னை என் தோளில் ஏற்பேன் 
ஒருவேளை இல்லையென்றால் 
என் நெஞ்சில் காப்பேன் 

வெட்கம்












பெண்ணே !!! அழகாய் 
வெட்கப்படுதலெப்படியென்று 
நீ ஓர் விதி செய்திடு

இனி உன் விதிப்படியே 
நாணத்தை தவிர்ப்பவர்களும்,
அதை மறந்த சில பெண்களும்  
வெட்கப்படட்டும் 
காரணம் அதை  போதிக்க 
உன்னை விட்டால் வேர்யாரும் 
இல்லையாம் இவ்வுலகில் 
என்னெனில் அந்த பிரம்மனுக்கும் 
உனக்கு போட்டியாய் 
ஒருவளை உருவாக்கும் 
திட்டமில்லையாம்  

எனவே உன்னுடனனேயே  
அழிந்துவிடாமல் 
உனக்கு மட்டுமே  தெரிந்த 
இந்த கலையை 
பார் முழுதும் பரப்பிவிடு 

Thursday, August 23, 2012

நினைவுகள்














பல வருடங்கள் கழித்து 
நாங்கள் படித்த கல்லூரியை 
கடந்து சென்றது நான் 
பயணித்த பேருந்து ...

அவள் அந்நாளில் 
பேருந்திற்காய் 
நின்ற இடத்தில 
அவள் நினைவிற்கு 
துணையாய் அங்கேயே 
நின்றுவிட்டது  என் மனம் 

மனமின்றி வெறுமையாய் 
தொடர்ந்து பயணிக்கிறேன் 

Wednesday, August 22, 2012

பெயர்
















கவிஞனாய் இரண்டு வகை
கவிதை எழுதலாம் 
ஒன்று, பெயருக்கு எழுதுவது 
மற்றொன்று,
பெயர் பெற்றுத்தர எழுதுவது 

உன் பெயருக்கு 
கவிதை எழுதும் போதெல்லாம் 
அது எனக்கு 
பெயர் பெற்று தருகின்றது 

உன் பெயரில் கவிதை 
எழுத காரணம் , இப்போதைக்கு 
உன் பெயருக்கு எழுத 
என்னிடம் எஞ்சி இருப்பது 
என் ஒரே  உயிரும், 
சில கவிதைகளும் ...