Wednesday, October 5, 2011

கலங்கிய கண்கள்













சிலகாலம்
பிரியப்போகிறேன் என்னவளை ...
என்னக்கே நீரில்
மிதந்தது கண்கள் 
அவளோ
எப்போதும் போல
மௌனமாய் புன்னகைத்தாள்..
அவள் புன்னகை போலி
என்று தெரிந்தும்
கேட்டேவிட்டேன் அவளிடம்
என் பிரிவு உன்னை
பாதிக்கவில்லையா  என்று
அவள் சொன்னாள்
இப்போதல்ல நீ
அருகில் இல்லாத
ஒவ்வொரு நொடியும்
கூட நான் மனமுடைந்து போவதால்
என் கண்களில் கண்ணீரும்
தீர்ந்துவிட்டது
தீர தீர நிறைய
என் கண்களென்ன
அமுத சுரபியா ??
இனி அழுதாலும்
என் கண்களிலிருந்து
வருவது என் குருதியாக
தான் இருக்குமென்று ....

1 comment: