மறக்க முடியவில்லை சில பெயர்களை
வெறுக்க முடியவில்லை சில பேர்களை ,
இரண்டுமே
உறுத்திக்கொண்டே இருக்கிறது
பெயர்கள் நினைவில்
சில பேர்கள் நெஞ்சத்தில்
நீ என்னை விட்டு விலகி தொலைக்காமல்
இருந்திருக்கலாம்
என இந்நாளில் புலம்புவதை விட
அன்றே நான் உன்னுடன் பழகிதொலைக்காமல்
இருந்திருந்தால் என்னை தொலைக்காமலே
வாழ்ந்திருப்பேன் நிம்மதியாய்