Monday, October 20, 2014
Friday, October 3, 2014
Monday, July 14, 2014
Sunday, April 6, 2014
வாசகர்
அன்று வெற்று காகிதமாய்,
வெள்ளைத்தாளாய் இருந்த என்
மனதில் அறிந்தோ அறியாமலோ
காதல் என்ற வார்த்தையை
முதல் வரியாய் கிறுக்கிச்சென்றாள்
என்னுடைய என்னவள்
முதல் கோணல் முற்றிலும் கோணல்
என்பதாய், எழுதிய அவளே விட்டுச்சென்ற
பின்பும், நானே முயன்றும் கூட
இந்நாள் வரையில் சரிசெய்ய முடியாத
நிலையில் நிலைத்துவிட்டது
என் வாழ்க்கை கட்டுரை
இதனால் தானோ என்னமோ
திறந்த புத்தகமாய் வாழும் என்னை
சிலர் படிக்க முயல்வதும் இல்லை
படித்தவர்கள் புரிந்து கொள்வதுமில்லை
நட்புடன் என்னை வாசிக்கும்
வாசகர்களுக்காய் காத்திருக்கிறேன்
காரணம் எழுதியவனுக்கும் புரியாமல்
போனது படிப்பவனுக்கு புரியும்
விந்தை தான் நட்பு
எழுதியது காதலோ, கடவுளோ
கோணளாகி போன
என் வாழ்க்கையை என் நட்பு தான்
புரிந்துகொள்ளும், சீர்படுத்தும் என்ற
நம்பிக்கையுடன் நான்...
Saturday, February 1, 2014
இது முடிவின் துவக்கம்
எனக்கே தெரியாமல் நான்
எங்கோ தொலைந்துவிட்டேன்
என் முகவரியை இழந்துவிட்டேன்
இதயம் காலியாய்
எண்ணம் வெறுமையாய்
ஒன்றுமற்றவனாய்
யோசிக்க கூட முடியாமல்
ஏதோ ஒரு பாரம் நெஞ்சடைக்க
தேம்பிக்கொண்டு நிற்கிறேன்
தனிமையில்
சந்தோசமோ துக்கமோ
ஒரு நட்பாய், உறவாய், காதலாய்
ஏன் உயிர் குடுக்கும்
என் சுவாசமாய் நான் நேசித்த
என் கவிதைகளும் இன்று
எனக்கு வர மறுக்கிறது
இப்போது கவிதை என்று
எதுவுமே எனக்கு தோன்றவுமில்லை
இனி எழுதுவேனென்ற நம்பிக்கை
துளியும் இல்லை
எனக்குள்ளிருந்த கவிஞனின்
மரணத்தருவாயோ இது??
மணல் கேணியாய் தோண்ட
தோண்ட ஊற்றெடுக்கும் என்ற
இருமாப்பில் இருந்துவிட்டேனோ
கைப்பிடி மணலாய் இன்று
துளியுமில்லாமல் வற்றிபோனது
என் தவறு தான்
அணையப்போகிற தீபம்
அற்புதமாய் ஒளிர்வது போல
கடைசிகட்ட கவிதைகள்
இது முடிவின் துவக்கம் என
சொல்லியதை புரிந்துகொள்ளாமல்
அலட்சியமாய் இருந்துவிட்டேன்
இனி அழுதென்ன லாபம்
வார்த்தைகளற்ற வெள்ளை காகிதமாய்
உயிரற்ற உடலாய் மீதி வாழ்க்கையை
வெறுமையுடன் தொடர முயல்கிறேன்
Subscribe to:
Posts (Atom)