Monday, October 20, 2014

உறுத்தல்

 












மறக்க முடியவில்லை சில பெயர்களை
வெறுக்க முடியவில்லை சில பேர்களை ,
இரண்டுமே
உறுத்திக்கொண்டே இருக்கிறது
பெயர்கள் நினைவில்
சில பேர்கள் நெஞ்சத்தில்

Friday, October 3, 2014

தொலைக்காமலே













நீ என்னை விட்டு விலகி தொலைக்காமல்
இருந்திருக்கலாம்
என இந்நாளில் புலம்புவதை விட
அன்றே நான் உன்னுடன் பழகிதொலைக்காமல்
இருந்திருந்தால் என்னை தொலைக்
காமலே
வாழ்ந்திருப்பேன் நிம்மதியாய்

Monday, July 14, 2014

சுடும் நிலவு










எனக்கு பிடித்த
நிலவும் கூட முதல்முறையாய்
என்னை சுட்டுவிட்டதால்
இன்னும் அதிகமாய் வலிக்கிறது
அதிசயமாய் உயிர் போகவில்லை
ஆனால் அடுத்த முறை இந்த நிலை
நிரந்திரமில்லை

Sunday, April 6, 2014

தேவை





















அள்ளிக்கொடுக்க வேண்டாம்
கிள்ளியாச்சும் கொடு
அத்தியாவசமாய், அவசரமாய்
அவசியமாய் எனக்கு
தேவைபடுகிறது, அருகாமையில்
உன் அன்பும், நிரந்திரமாய்
நிலைத்திருக்கும் உன் நட்பும்

வாசகர்













அன்று வெற்று காகிதமாய், 
வெள்ளைத்தாளாய்  இருந்த என்
மனதில் அறிந்தோ அறியாமலோ
காதல் என்ற வார்த்தையை
முதல் வரியாய்  கிறுக்கிச்சென்றாள்
என்னுடைய என்னவள்

முதல் கோணல் முற்றிலும் கோணல்
என்பதாய், எழுதிய அவளே விட்டுச்சென்ற
பின்பும்,  நானே முயன்றும் கூட
இந்நாள் வரையில் சரிசெய்ய முடியாத
நிலையில் நிலைத்துவிட்டது 
என் வாழ்க்கை கட்டுரை

இதனால் தானோ என்னமோ
திறந்த புத்தகமாய் வாழும் என்னை
சிலர் படிக்க முயல்வதும் இல்லை
படித்தவர்கள் புரிந்து கொள்வதுமில்லை

நட்புடன் என்னை  வாசிக்கும்
வாசகர்களுக்காய் காத்திருக்கிறேன் 
காரணம் எழுதியவனுக்கும் புரியாமல்
போனது படிப்பவனுக்கு புரியும்
விந்தை தான் நட்பு

எழுதியது காதலோ, கடவுளோ
கோணளாகி போன
என் வாழ்க்கையை என் நட்பு தான்
புரிந்துகொள்ளும், சீர்படுத்தும் என்ற
நம்பிக்கையுடன் நான்...

Saturday, February 1, 2014

இது முடிவின் துவக்கம்












எனக்கே தெரியாமல் நான்
எங்கோ தொலைந்துவிட்டேன்
என் முகவரியை  இழந்துவிட்டேன் 
இதயம் காலியாய்
எண்ணம் வெறுமையாய்
ஒன்றுமற்றவனாய்  
யோசிக்க கூட முடியாமல்
ஏதோ ஒரு பாரம் நெஞ்சடைக்க
தேம்பிக்கொண்டு நிற்கிறேன்
தனிமையில் 

சந்தோசமோ துக்கமோ 
ஒரு நட்பாய், உறவாய், காதலாய் 
ஏன் உயிர் குடுக்கும் 
என் சுவாசமாய் நான் நேசித்த
என் கவிதைகளும் இன்று
எனக்கு வர மறுக்கிறது

இப்போது கவிதை என்று 
எதுவுமே எனக்கு தோன்றவுமில்லை 
இனி எழுதுவேனென்ற நம்பிக்கை
துளியும் இல்லை
எனக்குள்ளிருந்த கவிஞனின்
மரணத்தருவாயோ இது??

மணல் கேணியாய் தோண்ட
தோண்ட ஊற்றெடுக்கும் என்ற
இருமாப்பில் இருந்துவிட்டேனோ
கைப்பிடி மணலாய் இன்று
துளியுமில்லாமல் வற்றிபோனது   

என் தவறு தான் 
அணையப்போகிற தீபம்
அற்புதமாய் ஒளிர்வது போல
கடைசிகட்ட கவிதைகள்
இது முடிவின் துவக்கம் என 
சொல்லியதை புரிந்துகொள்ளாமல்
அலட்சியமாய் இருந்துவிட்டேன்

இனி அழுதென்ன லாபம்
வார்த்தைகளற்ற வெள்ளை காகிதமாய் 
உயிரற்ற உடலாய் மீதி வாழ்க்கையை
வெறுமையுடன் தொடர முயல்கிறேன்