Monday, September 23, 2013

கற்பித்தல்















என்னதான் 
காதல் படிக்காதவனையும் 
எழுத்தாளன் ஆக்கினாலும்
அது ஆண் பெண் பேதம்
பார்த்தே தன் போதனையை
செய்கிறது 

உதாரணமாய் 
காதலில் விழுந்தவுடன் 
ஆணாயிருந்தால் அவன்
தன் காதலியை நினைத்து
கவிதை மட்டுமே எழுதுகிறான்
பெண்ணாயிருந்தால் தன்
காதலனின் தலைவிதியையே
மாற்றி எழுதுகிறாள்
சில சமயம் கவிதையாய்
பல சமயம் வெறும் 
கிறுக்கல்களாய்

No comments:

Post a Comment