Monday, September 23, 2013

மதிப்பு










ரூபாயின் மதிப்பு
வீழ்ந்து விட்டதாம்
எனக்கு என்ன கவலை
என்னவள் என்னிடம்
கொடுத்த ஒரு பத்து
ரூபாய் நோட்டில்
இந்த உலகமே என் கையில்
கிடைக்கப்பெறும் போது 

என் வீட்டு கண்ணாடி

















நான் மிகவும் நேசித்த,
அளவுக்கு அதிகமாய்
விரும்பிய ஓர் இதயம்
என்னை ஏமாற்றிய பின்பு
தான் உணர்ந்துகொண்டேன்
இந்நாள்வரையில் 
நான் நம்பிய, நான் நம்பும் பல
என்னை ஏமாற்றிக்கொண்டு
தான் இருந்திருக்கிறது

உதாரணமாய் 
தோல்வியுடனும்,
ஏமாற்றத்துடனும் அதன் முன்
நான் என் முகம் காட்ட
இது வரை தனக்கென தனி
முகமில்லை என என்னிடம்
நடித்துக்கொண்டிருந்த
நான் நம்பிக்கொண்டிருந்த
என் வீட்டு கண்ணாடி தன்
சுயமுகம் காட்டியது

தோல்வியில் துவண்டு, 
ஏமாற்றத்துடன் ஏங்கி,
கண்களில் கண்ணீருடன்
நிற்கும் என்னை 
பார்த்து ஏளனமாய்
சிரித்தது

அந்த சிரிப்பில் அது
சூசகமாய் சொன்னது
"உனக்கொன்றும்
தோல்வியோ, ஏமாற்றமோ,
இழப்போ, அழுகையோ 
புதிதல்ல
நீ பார்க்கும் போதெல்லாம்
உன்னை ஏமாற்றும் என்னை
விடவா நேற்று வந்த அந்த
இதயம்..உன்னை
ஏமாற்றிவிட்டது
இதற்க்காகவா இப்படி
நொறுங்கிவிட்டாய் ?"

இதுதான் உலக உண்மை
என உணர்ந்து, அதன் முன்   
சிரிக்க முற்பட்டேன் இந்த
முறை என் பிம்பம் மட்டும்
சிரிக்க, என் வீட்டு கண்ணாடியோ 
திரும்பவும் என்னை
ஏமாற்ற துவங்கியது  

கற்பித்தல்















என்னதான் 
காதல் படிக்காதவனையும் 
எழுத்தாளன் ஆக்கினாலும்
அது ஆண் பெண் பேதம்
பார்த்தே தன் போதனையை
செய்கிறது 

உதாரணமாய் 
காதலில் விழுந்தவுடன் 
ஆணாயிருந்தால் அவன்
தன் காதலியை நினைத்து
கவிதை மட்டுமே எழுதுகிறான்
பெண்ணாயிருந்தால் தன்
காதலனின் தலைவிதியையே
மாற்றி எழுதுகிறாள்
சில சமயம் கவிதையாய்
பல சமயம் வெறும் 
கிறுக்கல்களாய்