Wednesday, October 24, 2012

பயம்















 
நீ அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது என்று
நான் ஒரு போதும் நான்
பயந்து போவதில்லை
ஆனால் கண்டிப்பாய்
வியந்து போகிறேன்
வான் தேவதைகளுக்கு
நிகராய் இல்லையில்லை
அதை விடவும்
அதுவும் நம் பூமியில்
ஓர் அழகியா என்று..

என்னைப்போலவே
உன்னைக்காணும்
எவரும் வியப்பில்
வீழ்வதால் என்
வியப்பிலும் கூட 
உண்மை இருக்கத்தான் 
செய்கிறது

Wednesday, October 3, 2012

அழகி
















உன் ஒருவளை படைக்கவே 
தன்னிடம் உள்ள
மொத்த கற்பனைகளையும்
உபயோகித்து விட்டதாகவும்,
உலகில் யாருக்குமே தராத
அழகையும் அறிவையும்
உனக்கு மட்டுமே தந்து
விட்டதாகவும்
உலக மகளிர் யாவரும்
பிரம்மன்மே
லேயே வழக்கு 
தொடர்ந்துவிட்ட
னராம்

புது பிரச்சனையாய்

தேவகண்ணிகயரையும்
"இது ஓர வஞ்சனையென"
போராட்டத்தில்
இறங்கியுள்ளனராம்

யாரோ எப்படியோ

போகட்டும்.எனக்கென்ன ???

எனக்காகவே படைக்கப்பட்டு
நீ எனக்கே எனக்காய்
இவ்வுலகில்  இருக்கும் வரை

எனக்கு என்ன கவலை??   

கருப்பு உடை

 














யார் சொன்னது தேவதைகள்
வெள்ளை நிற உடைகள்
தான் அணியுமென்று??
என்னவளுக்கு பிடித்தே 
கருப்பு நிற உடைகள் தான்  

என் தேவதையின் உள்ளம்
வெள்ளை என்பதால்
கருப்பு உடையிலும் 
அவள் அழகு தான்