பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள
வேண்டிய இதயத்தை
என் அஜாக்கிரதையினால்
அவள் கண்களிடம்
பறிகொடுத்துவிட்டேன் ...
திருடிச்சென்றவளை குறை
சொல்லி என்ன பயன் ???
எடுத்துச்சென்றதன் நோக்கத்தை
இப்போது நிறைவேற்றுகிறாள்...
ஆம், என் கண்முன்னே
அதை நொறுக்கிக்கொண்டிருக்கிறாள்
ஆனால் என்னால்
என்னதான் செய்ய முடியும்
அமைதியாய்
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்
மரண வலியில் துடிக்கும்
என் விலை மதிப்பில்லா
இதயத்திற்கு...
No comments:
Post a Comment