Friday, April 27, 2012
Saturday, April 14, 2012
Monday, April 9, 2012
அஜாக்கிரதை
பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள
வேண்டிய இதயத்தை
என் அஜாக்கிரதையினால்
அவள் கண்களிடம்
பறிகொடுத்துவிட்டேன் ...
திருடிச்சென்றவளை குறை
சொல்லி என்ன பயன் ???
எடுத்துச்சென்றதன் நோக்கத்தை
இப்போது நிறைவேற்றுகிறாள்...
ஆம், என் கண்முன்னே
அதை நொறுக்கிக்கொண்டிருக்கிறாள்
ஆனால் என்னால்
என்னதான் செய்ய முடியும்
அமைதியாய்
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்
மரண வலியில் துடிக்கும்
என் விலை மதிப்பில்லா
இதயத்திற்கு...
சந்தேகம்
என் கவிதையின் முதல்
வாசகி அவள், விமர்சகி அவள்
என் பிரிய-சகி அவள்
கவிதை பிழைகளை மட்டும்
சொல்லிக்கொண்டிருந்தாள்
நான் திருத்திக்கொண்டேன்
இப்போது என்னிலேயே
பிழை கண்டிருக்கிறாள்
சொல்லிருந்தால்
திருத்திக்கொண்டிருப்பேன்...
ஆனால் அவளோ
காரணம் சொல்லாமல் தவிர்க்கிறாள்
நானோ
காரணம் தெரியாமல் தவிக்கிறேன்
இப்போது ஏனோ என்
கவிதைகள் மட்டுமல்ல
என் நட்பும் கூட தான்
அவளுக்கு பிடிப்பதில்லை
ஒரு வேளை அவள் திருத்திட
புதுக்கவிதைகள் கிடைத்தனவோ?
புது நட்பும் கிடைத்ததோ ??
எதை பற்றியும் எதுவும்
சொல்லாமல்
அமாணுஷ்யமாய் மௌனிக்கின்றாள்
எத்தனையோ முறை
சண்டையிட்டிருக்கிறோம்
ஆனால் இத்தனை
நாட்களாய் பேசாமல்
இருப்பதென்னவோ
இதுவே முதல் முறை
"பரவாயில்லை பேசிவிடு"
என்றது மனம், எழுதி வைத்த
மின்னஞ்சலையாவது
அனுப்பிவிட ஆசை தான்
ஆனாலும் எதோ தடுக்கிறது
என்னை காயப்படுத்தியிருந்தால்
கூட மறந்திருப்பேன்...
அனால் வார்த்தைக்கத்தியால்
கிழிக்கப்பட்டது என் நட்பன்றோ ?
போகட்டும் இனி என்ன??
யோசிக்கிறேன்
"நண்பா" என்ற வார்த்தையால்
ஏமாற்றப்பட்டு விட்டேனோ ??
நம்பிக்கையில்லா நட்பு இனி
எனக்கு தேவைதானோ ??
இந்த முறை நானல்ல
அவளே நல்ல நட்பை இழந்திருக்கிறாள்
சந்தேக தீயால் எனை உயிருடன்
எரிக்க ஆரம்பித்துவிட்டாள்
இனி என் சம்பல் கலந்த காற்றும்
அவள் பக்கம் வீசாது
Friday, April 6, 2012
யோசிக்கிறேன்
காதல் நிறைய கற்பிக்கும்
உண்மை தான்
ஆனால் கொஞ்சம்
வித்தியாசமாக ...
நான் எதெல்லாம் சரி என்று
நினைத்திருந்தேனோ அதை
எல்லாம் தவறென்று
கைவிட செய்தது
சிறு வயது முதல்
நான் இதுவரை எதை தவறென்று
எண்ணிக்கொண்டிருந்ததை
எல்லாம் சரி என
நினைத்திட செய்தது
இப்போது
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
என் வாழ்வில் இன்னமும்
அதன் உபதேசத்தை
பின்பற்ற வேண்டுமா என்று ??
Tuesday, April 3, 2012
Subscribe to:
Posts (Atom)