Saturday, October 22, 2011

நட்பை நம்புகிறேன்


 












நட்பு ஒன்றுதான் உலகத்தில்
சிறந்ததென்றிருந்தேன்
என் நம்பிக்கை பொய்யாகி ,
நட்பும் கூட காயப்படுத்தும்
என்றுணர்ந்துகொண்டேன் ..

காரணமேதுமின்றி
பேசமறுத்து,என்னை தவிர்த்து
தனிமை படுத்தி ரசி
க்கின்றனர்
நரகாசுரனை அழித்ததால்
தீபாவளி கொண்டாடினார்கள்
இவர்களோ ,
என் நட்பை வதைத்து
கொண்டாடுகிறார்கள்
அவர்களுக்கு
இதற்காவது நானும்
என் நட்பும் உதவியதாய்
எண்ணிக்கொள்கிறேன் ...
ஏனெனில்
அவர்கள் நடித்திருந்தாலும்
நான் நம்புகிறேன் என்
உண்மையான நட்பை!!!

வழி












உங்களுக்கு தெரிந்தால்
கடவுளை காண
ஓர்
வழி சொல்லுங்கள்...
என் வலிகள் நீங்க
கவலைகள் போக
அவரிடமாவது வழி
கேட்டுகொள்கிறேன்......

பண்டிகைகள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
புது சல்வாரில் அவள் வர
என்ன விசேஷம் என்றேன்...
"தீபாவளி வருகிறதே!!!" என்றாள்
நான் அப்போது தான்
புரிந்துகொண்டேன்
என்னவள் புத்தாடை அணிந்து
கொண்டாடுவதர்க்காகவே
பண்டிகைகள் போட்டி
போட்டுக்கொண்டு வருவதாய்...

Friday, October 14, 2011

வலி
























என்
நெஞ்சில் நிறைந்தவளை
மறக்கமுடியாமல்
இரத்தத்தில் கரைந்தவளையாவது
வெளியேற்றி விடலாம்
என்ற எண்ணத்திலேயே
இந்த கொடூர முயற்சி...

இது மூடத்தனம் ,
இது மிருகத்தனம்
என்பீர்கள்
இது முட்டாள் தனம்
என்பதை நான் அறிந்தும்
என் செய்வேன் ?
சில சமயங்களில்
சாக்கரடீஸ்களையும்
கூட தலைகுப்புற
சாக்கடையில்  தள்ளும் காதலில்
முன்பு விழுந்தேன்
அதனால்
இப்போது வீழ்ந்தேன்

அவள்
பிரிவை காட்டிலுமா
இது வலி கொடுத்துவிடும் ??

வலி, வலி நிவாரணி
இரண்டுமேயான
காதல் விசித்திரமானது தான் ..
அவள் பிரிந்த
போது
வலி கொடுத்தது
அவளை மறக்க நினைத்து
இப்படி காய
ப்படுத்திக்கொண்ட
போதோ வலி மறந்தது ..

என் கடைசி சொட்டு
இரத்தம் வெளியேறும் முன்
நான் கண்ட உண்மையை
சொல்லிவிடுகிறேன்...
காதல் சுகமான வலியல்ல
அது கேட்பது என் போன்ற
அப்பாவிகளின் நரபலி

கொலு பொம்மை















அழகிய கொலு பொம்மை
போல் பிரிந்து சென்ற
வள் நினைவுகள் ...
பல சமயம் உபயோகமற்று
பரணில் கிடந்தாலும்,
எடுக்கும் போது
அழகாய் தெரிகிறது
ரசிக்க தோன்றுகிறது
கவலைகள் மறைகிறது
 

பொம்மையோ, நினைவுகளோ
இனி கிடப்பில்
போட வேண்டாம் என்றும்
கூட தோன்றுகிறது
ஆயினும்
வேறு வழியின்றி
திரும்ப
பரணுக்கே செல்கின்றது

Monday, October 10, 2011

நீ.நான்..நம் காதல்...












நான் பூமி
நீ என் பொன்(பெண்) வானம்
உண்மையோ, பொய்யோ,
கண்ணுக்கெட்டா தொலைவில்
வானமும் பூமியும்
கைசேர்த்து இணைகின்றது
இதே நம்பிக்கையில்
என்றோ ஓர்நாள் நாமும்
இணைவோம் என
நீ.
நான்...
நம் காதல்......

Friday, October 7, 2011

நீ விசித்திரமே!!!












அதெப்படி உன் வார்த்தைகளிலும்
ஒரு அமைதி
உன் மௌனத்திலும்
சில வார்த்தைகள்
விசித்திரமான பெண்தானடி நீ ...
ஆனால் அது எப்படி
இவ்விரண்டையுமே  எனக்கு மட்டும்
புரியவைக்கிறாய்???

அழகில் குழப்பம்
















யோசித்து யோசித்து
பார்த்துவிட்டேன்
எவ்வளவு தடவை யோசித்தாலும்
இன்னமும் குழப்பமே
மிஞ்சுகிறது
என்னவளை காட்டிலுமா
அந்த வெண்ணிலா அழகு

தொலைத்துவிட்டேன்
















அவளிடம் தெரிந்தே
தொலைத்ததால்
எவரிடமும்
புகார் குடுக்கவில்லை
என் இதயத்தை காணவில்லை
என்று

Wednesday, October 5, 2011

கலங்கிய கண்கள்













சிலகாலம்
பிரியப்போகிறேன் என்னவளை ...
என்னக்கே நீரில்
மிதந்தது கண்கள் 
அவளோ
எப்போதும் போல
மௌனமாய் புன்னகைத்தாள்..
அவள் புன்னகை போலி
என்று தெரிந்தும்
கேட்டேவிட்டேன் அவளிடம்
என் பிரிவு உன்னை
பாதிக்கவில்லையா  என்று
அவள் சொன்னாள்
இப்போதல்ல நீ
அருகில் இல்லாத
ஒவ்வொரு நொடியும்
கூட நான் மனமுடைந்து போவதால்
என் கண்களில் கண்ணீரும்
தீர்ந்துவிட்டது
தீர தீர நிறைய
என் கண்களென்ன
அமுத சுரபியா ??
இனி அழுதாலும்
என் கண்களிலிருந்து
வருவது என் குருதியாக
தான் இருக்குமென்று ....

Tuesday, October 4, 2011

பிரிவு













 


என்னவளை பிரிந்த
நொடி முதல் என்
வார்த்தைகள் மௌனமானது
சிந்தனை மங்கிப்போனது
கற்பனை வளமும் தீர்ந்து போனது
என் எழுத்துக்கள் குறைந்து போனது,
உதாரணமாய் என் கவிதைகள்
அன்று முப்பது வரிகளில் கவிதை எழுதியவன்
இன்று மூன்றே
எழுத்துக்களில்  
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்
அவளின் பெயரை ....